More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • யாழ்ப்பாணத்தை சேர்ந்த பிரபல கடத்தல் மன்னன்
யாழ்ப்பாணத்தை   சேர்ந்த பிரபல கடத்தல் மன்னன்
Jan 19
யாழ்ப்பாணத்தை சேர்ந்த பிரபல கடத்தல் மன்னன்

இந்தியாவிலிருந்து கடல்மார்க்கமாக யாழ்ப்பாணத்திற்கு போதைப்பொருள் கடத்தும் வலையமைப்பின் சூத்திரதாரி என குற்றஞ்சாட்டப்படும் ஒருவர் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளதாக தமிழகசெய்திகள் தொிவிக்கின்றன.



சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் மாதகல் பகுதியை சேர்ந்த மாதகல் மதன் என்ற புனை பெயருடைய 44 வயதான நபரே கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகபர் வேதாரணியம் - செம்போடை பகுதியில் நேற்றுமுன்தினம் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.



போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் யாழ்ப்பாணத்தில் பாதுகாப்புதுறையின் கண்காணிப்பு மற்றும் தேடுதலில் இருந்த நிலையில் சந்தேக நபர் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளார் . 2021 அக்டோர் நடுப்பகுதியில் யாழ்ப்பாணத்திற்கு கஞ்சாகடத்திய விவகாரத்தில் இவர் தமிழகத்தில் தேட்பட்டுவந்த நிலையில், தமிழக பொலிஸாருக்கு போக்குகாட்டி 2 மாதங்கள் தலைமறைவாக இருந்த நிலையில் நேற்றுமுன்தினம் கைதானார்.



அதேசயம் சந்தேகநபர், 2012ம் ஆண்டு தமிழகத்தில் ஹெரோயின் போதைப் பொருளுடன் கைதாகி சுமார் ஒன்றரை வருடங்களாக சிறைத்தண்டணை அனுபவித்த பின்னர் 2013ம் ஆண்டு சிறையிலிருந்து விடுதலையானவர் என கூறப்படுகிறது.



மீண்டும் விமானம் மூலம் நாடு திரும்பிய குறித்த நபர் கடற்றொழிலில் ஈடுபட்டிருந்தபோதும், மீளவும் கடத்தலில் ஈடுபடுகின்றார் என்ற கோணத்தில் பாதுகாப்பு பிரிவின்  கண்காணிப்பில் இருந்தார்.இந்நிலையில் மீண்டும் இந்தியாவுக்குள் நுழைந்த குறித்த நபர் 2021 அக்டோபர் நடுப்பகுதியில் யாழ்ப்பாணத்திற்கு கஞ்சா கடத்த முயற்சித்ததாக கூறப்படுகின்றது.



சந்தேகநபர் தமிழகத்தில் பிறிதொரு இடத்தில் கஞ்சா பெற்றுகடல்மார்க்கமாக வேதாரண்யம் பகுதிக்கு வந்த இலங்கை கடத்தல் குழுவின் படகிலிருந்து அவர் இறங்கியதுடன், 3 மூடை கஞ்சாவையும் இறக்கியதுடன், மிகுதி கஞ்சாவுடன் சென்ற ராஜன் என்ற மயிலிட்டியை சேர்ந்த நபரும், சாகுல் என்ற மட்டக்களப்பை சேர்ந்த நபரும் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.மதன் கொண்டு சென்றதாக கூறப்பட்ட கஞ்சா புஸ்பவனம் பகுதியில் கைப்பற்றப்பட்டபோது அவர் தலைமறைவானார். இந்த நிலையில் நேற்று முன்தினம் வேதாரண்யம் - செம்போடை கிராமத்தில் கைது செய்யப்பட்டு தற்போது சைதாப்பேட்டை உப சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டு  தகவல்கள் மேலும் கூறுகின்றன.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Sep28

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் ஜப்பானிய பிரதமர்

Apr02

  நாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள அவசரகாலச்

Jul14

ஆசிரியர்களை தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு செ

Jul01

அரசியல் கைதிகளை வைத்து அரசியல் நடத்த வேண்டாம் என்று அ

Mar04

இரணைதீவில் பொது மக்கள் வசிக்காத பகுதியில் மாத்திரமே க

Oct02

முச்சக்கர வண்டி கட்டணத்தை குறைப்பது தொடர்பில் அவதானம

Apr01

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம், இலங்கைக்கு வரவிரு

Mar29

யாழ்ப்பாணம் - மாதகல் பகுதியில் 150 கிலோ கஞ்சா நேற்று இரவு

May20

களுத்துறை, கமகொட, ஹோமடுவாவத்தையில் பகுதியில் 43 வயதுடைய

Jan19

நான் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் சிறிகொ

Jun04

 

டீசல் தட்டுப்பாடு காரணமாக திங்கட்கிழமை (6) முதல்

Mar01

நியாயமற்ற வரிவிதிப்பு மற்றும் அரசின் தன்னிச்சையான நட

Mar07

பண்டாரவளை - எலபெத்த கும்புர தகுன கெபிலேவெல பகுதியில் ப

Mar15

கண்டி தனியார் பாடசாலையொன்றில் மாணவர்களை கொடூரமாக தாக

May03

நாட்டில் உள்ள பொருளாதார பிரச்சினை காரணமாகச் சரியான மு