More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • யாழில் மூடப்பட்ட சுவிஸ் தூதரகத்தை மீண்டும் திறவுங்கள்...!
யாழில் மூடப்பட்ட சுவிஸ் தூதரகத்தை மீண்டும் திறவுங்கள்...!
Sep 12
யாழில் மூடப்பட்ட சுவிஸ் தூதரகத்தை மீண்டும் திறவுங்கள்...!

யாழ்ப்பாணத்தில் இயங்கி வந்து பின்னர் தற்காலிகமாக மூடப்பட்ட சுவிஸ் தூதரக அலுவலகத்தை மீண்டும் திறக்க ஆவண செய்யுங்கள் என்று இலங்கைக்கான சுவிஸ் தூதரிடம் வடக்கு – கிழக்கு ஆயர் மன்றம் கோரிக்கை விடுத்துள்ளது.



யாழ்ப்பாணம், திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் மன்னார் மறைமாவட்டங்களின் ஆயர்கள் கையொப்பமிட்டு இலங்கைக்கான சுவிஸ் தூதருக்கு அனுப்பிய கடிதத்தில் மேற்படி வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.



போர் முடிவுக்கு வந்து 12 வருடங்கள் நிறைவுற்ற போதும் பல்வேறு நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்கவேண்டியுள்ள வடக்கு – கிழக்கு பிரதேசங்களில் சர்வதேச நிறுவனங்கள், மனித உரிமை கண்காணிப்பாளர்கள், இராஐதந்திர அதிகாரிகளின் பிரசன்னம் மிகவும் அவசியமாக இருக்கின்ற இந்தச் சந்தர்ப்பத்தில் சுவிஸ் தூதரகத்தினுடைய அலுவலகத்தின் பிரசன்னம் மிகவும் முக்கியமானது என்பதை ஆயர் மன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.



அதே வேளையில், கடந்த காலங்களில் சுவிஸ் அலுவலத்தின் பன்முகப்படுத்தப்பட்ட பணிகளினால் இலங்கை நாடும் குறிப்பாக வடக்கு – கிழக்கு மக்களும் அடைந்த நன்மைகளுக்காக இந்தக் கடிதத்தில் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.



அத்துடன் இலங்கையைத் தமது பூர்வீகமாகக் கொண்டு தற்போது சுவிஸ் பிரஜைகளாக இருக்கின்றவர்களின் குடும்ப அங்கத்தவர்கள் பலர் வடக்கு – கிழக்குப் பிரதேசங்களில் வாழுகின்ற நிலையில் அவர்களது சமூக, கலாசார, பொருளாதார தேவைகளைக் கண்காணிக்க யாழ்ப்பாணத்தில் மீளத் திறக்கப்படும் சுவிஸ் தூதரக அலுவலகம் மிகவும் உறுதுணையாக இருக்கும் என்றும் குறிபிட்டுள்ள வடக்கு – கிழக்கு ஆயர் மன்றம், இவற்றைக் கருத்தில்கொண்டு இந்த அலுவலகத்தை யாழ்ப்பாணத்தில் விரைவில் மீளத் திறக்க உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Aug07

கொழும்பு நகரின் சில இடங்களை இலக்கு வைத்து குண்டுத்தாக

Oct22

நிலக்கரி தாங்கிய கப்பல் ஒன்று நாட்டிற்கு வருகை தரவுள்

Dec12

தோட்ட நிர்வாகம் மற்றும் கம்பனிகளுக்கு எதிராகவும், தொழ

Mar07

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பல்கலைக்கழக மாணவர்களை கலைக

Feb13

அடுத்த சிறுபோக பயிர் செய்கையின் போது விவசாயிகளுக்கு உ

Oct04

50 கிலோ எடையுள்ள சீமெந்து மூடையின் விலையை 100 ரூபாயால் கு

Jan19

கொரோனா பரவலுக்கு மத்தியில் இம்முறையும் 73ஆவது சுதந்தி

Sep30

யாழ்ப்பாணத்தில் காலாவதியான பொருட்களை விற்பனை செய்த 11

Jun06

உடன் நடைமுறைக்கு வரும் வகையில் 50 கிலோ கிராம் சீமெந்து

Feb06

சைபர் தாக்குதல் காரணமாக இலங்கையில் google.lk இணையதளம் முடக்

Mar29

ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்

Mar07

வெளிநாட்டு பணியாளர்கள் இலங்கைக்கு அனுப்பும் பணத்திற

Jul30

இலங்கையில் நாளாந்தம் பதிவாகும் கொரோனா வைரஸ் தொற்றாளர

Jan18

இலங்கை மின்சாரசபையின் உயர் அதிகாரிகள் ஜனாதிபதி கோட்ட

Feb02

தற்போதைய கொரோனா பரவல் அதிகரிப்பானது நாட்டை முடக்க வேண