More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • என்ஜினீயரிங் படிப்புக்கான கலந்தாய்வு இன்று தொடங்கியது!
என்ஜினீயரிங் படிப்புக்கான கலந்தாய்வு இன்று தொடங்கியது!
Sep 15
என்ஜினீயரிங் படிப்புக்கான கலந்தாய்வு இன்று தொடங்கியது!

தமிழ்நாட்டில் என்ஜினீயரிங் கல்லூரிகளில் சேருவதற்காக தரவரிசை பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. அதில் 13 பேர் 200-க்கு 200 மார்க் பெற்று இருந்தனர்.தமிழகத்தில் மொத்தம் 440 என்ஜினீயரிங் கல்லூரிகள் உள்ளன. அவற்றில் 1 லட்சத்து 51 ஆயிரத்து 870 இடங்கள் உள்ளன. இதில் சேருவதற்காக விண்ணப்பித்தவர்களில் 1 லட்சத்து 39 ஆயிரத்து 33 பேர் தகுதி உடையவர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.



இவர்களுக்கான முதல் கட்ட கலந்தாய்வு இன்று தொடங்கியது. ஆன்லைன் மூலமாக கலந்தாய்வு நடத்தி மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.



இதற்காக தமிழ்நாடு முழுவதும் 43 மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. அங்கிருந்தபடி ஆன்லைன் மூலமாக மாணவர்கள் கலந்தாய்வில் பங்கேற்று கல்லூரிகளை தேர்வு செய்தனர்.



இத்துடன் கம்ப்யூட்டர் மையங்கள் மூலமும், வீட்டில் இருந்தபடியும் சில மாணவர்கள் கலந்தாய்வில் பங்கேற்றனர். இன்றைய கலந்தாய்வு சிறப்பு பிரிவினருக்காக நடத்தப்பட்டது.



அரசு பள்ளிகளில் இட ஒதுக்கீடு மாணவ-மாணவிகள், மாற்றுத் திறனாளிகள், விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவ வீரர்களின் பிள்ளைகள் ஆகியோர் இந்த சிறப்பு குழுவில் இடம் பெற்று இருந்தனர்.



அவர்கள் கலந்தாய்வில் பங்கேற்று தர வரிசைப்பட்டியலின் அடிப்படையில் விரும்பிய கல்லூரிகளை தேர்வு செய்தனர். சிறப்பு பிரிவு கலந்தாய்வு வருகிற 24-ந் தேதி வரை தொடர்ந்து நடைபெறும்.



அதன் பிறகு வருகிற 27-ந் தேதி பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெறும். அடுத்த மாதம் 17-ந் தேதி வரை பொதுப்பிரிவு கலந்தாய்வு தொடர்ந்து நடைபெறும்.



அனைத்து இடங்களையும் நிரப்பும் வகையில் இந்த முறை 5 கட்டங்களாக கலந்தாய்வு நடத்தப்படுகிறது. உரிய இடங்கள் நிரம்பும் வரை கலந்தாய்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 



முதல்கட்ட கலந்தாய்வில் தேர்வு செய்யப்பட்ட அரசு கல்லூரி இட ஒதுக்கீடு மாணவர்களுக்கு சேர்க்கை ஆணையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 18-ந் தேதி வழங்க உள்ளார்.



 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jan21

கடந்த கால பேச்சுவார்த்தைகளில் நடந்ததை ஒதுக்கி வைத்து

Mar06

விழுப்புரம் மாவட்டத்தில் வாக்குச் சவாடிகளுக்கு அனுப

Mar28

ஆந்திராவில் நடந்த சாலை விபத்தில் 5 பெண்கள் உட்பட 8 தமிழ

Mar28

தமிழக சட்டமன்ற தேர்தலில் நட்சத்திர தொகுதியாக சென்னை ஆ

Sep06

முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி சமூக வலைதளத்தில் வ

Jul24

70-களின் பின்னணியில் குத்துச்சண்டை விளையாட்டை மையப்பட

Mar12

தேசிய விருது பெற்ற இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் தற்போது செ

Mar17

இந்தியாவில் கடந்த டிசம்பர் 2-ம் வாரத்தில் இருந்து இதுவ

Jun06

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இண

Jun18

கொரோனாவின் எதிரொலியாக உலகம் முழுவதும் வறுமை அதிகரித்

Jul30

கர்நாடகத்தில் பா.ஜனதா ஆட்சி அமைந்து 2 ஆண்டுகள் ஆகியுள்

Feb01

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசியானது, சுயசார்ப

May16

கொரோனா தொற்று நிலவரம் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை ந

Aug25

நாட்டின் ரூ.6 லட்சம் கோடி மதிப்பிலான சொத்துகளை காசாக்க

Feb24

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி பிரத