More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • டொலர் தட்டுப்பாடு : மருந்து இறக்குமதியாளர் சங்கங்கள் விடுத்துள்ள கோரிக்கை!
டொலர் தட்டுப்பாடு : மருந்து இறக்குமதியாளர் சங்கங்கள் விடுத்துள்ள கோரிக்கை!
Feb 07
டொலர் தட்டுப்பாடு : மருந்து இறக்குமதியாளர் சங்கங்கள் விடுத்துள்ள கோரிக்கை!

மருந்துகளை இறக்குமதி செய்வதற்கான கடன் கடிதத்தைத் திறக்க டொலரை விடுவிக்க முடியாவிட்டால், மருந்துகளின் விலைக் கட்டுப்பாட்டை நீக்க வேண்டும் அல்லது குறைந்தபட்சம் 15% விலையை அதிகரிக்க வேண்டும் என்று மருந்து இறக்குமதியாளர் சங்கங்கள், அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளன.



மருந்துகளை இறக்குமதி செய்வதற்காக கடன் கடிதங்களை திறக்க தேவையான டொலர்களை வழங்க முடியாது என வர்த்தக வங்கிகள் தெரிவித்துள்ளன.



இந்நிலையில், மருந்து இறக்குமதியாளர்கள் கடும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ள நிலையிலேயே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையானது மருந்து உற்பத்தி, வழங்கல் மற்றும் ஒழுங்குமுறை இராஜாங்க அமைச்சுடன் இணைந்து 2021 ஒகஸ்டில் மருந்துகளின் விலையை 9% உயர்த்த ஒப்புதல் அளித்துள்ளது.



இருப்பினும், அது அமெரிக்க டொலரின் மதிப்பு 176 ரூபாயாக இருந்த காலகட்டம் என்றும் இப்போது டொலர் மதிப்பு ரூ. 230 என்றும் இறக்குமதியாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.



மூலப்பொருட்களின் விலை அதிகரித்துள்ளதால், உள்ளூரில் பரசிட்டமோல் உற்பத்தி செய்வது கடினமாகி வருவதாக மருந்து உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.



தற்போதைய கட்டுப்பாட்டு விலையான ரூ.200க்கு மருந்து தயாரிக்க நிறுவனங்களால் முடியாததால், நாட்டில் பரசிட்டமோல் உற்பத்தி வெகுவாக குறைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar14

இலங்கையில் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகளின்

Jun21

கட்சித் தலைவர்களுக்கிடையே இன்றைய தினம் விஷேட கலந்துர

Mar12

வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்னால்  தொடர் போ

Mar29

இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் த

Sep19

பாதுகாப்பு அதிகாரிகள் இருவரை தாக்கிய குற்றச்சாட்டின

Aug31

யாழ் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜெகத் க

Mar12

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அடையாளம் காணப்பட

Sep13

தனிமைப்படுத்தல் சட்டம் அமுல்படுத்தப்பட்ட ஆகஸ்ட் மாத

Jun08

அமைச்சர் நாமல் ராஜபக்‌ச, 2022 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம

Sep19

இலங்கையில் 96 புதிய எரிபொருள் நிரப்பு நிலையங்கள் திறக்

Mar21

நாட்டில் தற்போது அத்தியாவசிய பொருட்கள் உட்பட மக்களின

Sep22

தேசிய கடல்சார் வளங்களை பாதுகாக்கும் வாரம் எனும் தொனிப

Jan27

இலங்கை, தற்போது கட்டிட நிர்மாணத்துறையில் மூன்று மெற்ற

Oct15

அடக்குமுறையைக் கையாள்வதன் ஊடாக அரசியல் மற்றும் சமூக ஸ

Feb09

நாட்டின் தற்போதைய நெருக்கடிகள் தொடர்பில் எதிர்க்கட்