More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • கடுமையான தீர்மானங்களை எடுத்துள்ளோம்! சவால் விடும் பிரதமர் மஹிந்த
கடுமையான தீர்மானங்களை எடுத்துள்ளோம்! சவால் விடும் பிரதமர் மஹிந்த
Feb 09
கடுமையான தீர்மானங்களை எடுத்துள்ளோம்! சவால் விடும் பிரதமர் மஹிந்த

சவால்களுக்கு மத்தியில் நாட்டில் பல்வேறு கடுமையான தீர்மானங்களை எடுக்க நேரிட்டதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.



அநுராதபுரத்தில் தற்போது இடம்பெற்று வரும் மக்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட பிரதமர் இதனை குறிப்பிட்டுள்ளார்.



நாட்டு மக்களை சிந்தித்து ஜனாதிபதியினால் பல்வேறு தீர்மானங்கள் எடுக்க நேரிட்டது. அடுத்த ஜனாதிபதி தேர்தலை குறித்து சிந்தித்து தீர்மானங்கள் எடுக்கப்படவில்லை.



இரசாயன உரத்தை தடை செய்தோம். மக்களின் ஆரோக்கியதற்காக இந்த கடுமையான தீர்மானத்தை ஜனாதிபதி எடுத்தார். நாங்கள் எடுத்து அனைத்து விடயங்களிலும் எங்களுக்கு எதிராக பல தரப்பினர் செயற்பட்டனர்.



சீனாவின் தடுப்பூசிக்கும் தவறான கருத்துக்களை வெளியிட்டார்கள். உலகின் சிறந்த தடுப்பூசி என கூறப்படும் பைசருக்கும் தவறான பிரச்சாரங்களை முன்னெடுத்தார்கள்.



இந்த நாட்டு விவசாயிகளின் பிரச்சினை என்ன என்பது எங்களுக்கு நன்றாக தெரியும். ஏன் என்றால் நாங்கள் விவசாய குடும்பத்தில் இருந்தே வந்தோம்.



நாங்களே நெல்லுக்கு அதிக கட்டணத்தை செலுத்தினோம். விவசாயிகள் நஞ்சருந்தி தற்கொலை செய்துக் கொண்ட காலங்களும் இருந்தது. எனினும் நாங்கள் அதனையும் மாற்றியமைத்தோம்.



அடுத்த தேர்தல்கள் குறித்து செயற்பட்டிருந்தால் போரையேனும் வெற்றிக் கொண்டிருக்க முடியாது. இறக்குமதியை தடை செய்தோம். அதனால் எவ்வளவு பெரிய சவாலுக்கு முகம் கொடுக்க நேரிடும் என எங்களுக்கு தெரியும்.



எனினும் நாங்கள் நாட்டிற்காகவே அனைத்தையும் செய்தோம். இன்று முதல் ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கையை உங்களிடம் எடுத்து வருகின்முடிந்தால் எதிர்க்கட்சியை அடுத்த தேர்தலில் வென்று காட்டுமாறு சவால் விடுகிறேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jan11

முல்லைத்தீவிலிருந்து கொழும்பு நோக்கி கேரளா கஞ்சாவின

Apr20

ரம்புக்கனையில் எதிர்ப்பில் ஈடுபட்டவர்கள் மீது நடத்த

Oct16

யாழ்ப்பாண நகர் பகுதியில் ஆயிரம் போதை மாத்திரைகள் மற்ற

Mar13

வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்னால் தொடர் போரா

Jan19

கொரோனா வைரஸினைக் கட்டுப்படுத்துவதற்கு ஏனைய நாடுகள் ப

May29

மதுபான உற்பத்தி நிலையங்களில், இதுவரை கையிருப்பில் உள்

Sep24

நாடாளுமன்ற சிற்றுண்டிச்சாலையில் உணவு விஷமானதாக கூறப

Oct02

யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக வாள்வெட்டு வன்முறையில

Oct21

மலையக மூத்த எழுத்தாளரான சாகித்திய ரத்னா விருது பெற்ற

Mar18

கண்டி, அலவத்துகொட பிரதேசத்தில் படுகொலை செய்யப்பட்ட நி

Sep22

இலங்கையில் இருந்து வெளிநாடுகளுக்கு கொண்டு செல்லப்பட

Apr02

மன்னார் மறைமாவட்டத்தின் ஓய்வு நிலை ஆயர் மேதகு கலாநிதி

May03

நடைபெற்றுக்கொண்டிருக்கும் அரசாங்கத்திற்கு எதிரான தொ

May16

இஸ்ரேலுக்கும் காசா பகுதிக்கும் இடையில் அதிகரித்து வர

May31

'' நான் ஆயிஷாவின்  அம்மாவின் நெருங்கிய உறவினர் .நான