More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • யுக்ரேய்னில் இருந்து 48 மணித்தியாலங்களுக்குள் வெளியேறுங்கள்!
யுக்ரேய்னில் இருந்து 48 மணித்தியாலங்களுக்குள் வெளியேறுங்கள்!
Feb 12
யுக்ரேய்னில் இருந்து 48 மணித்தியாலங்களுக்குள் வெளியேறுங்கள்!

யுக்ரெய்னை ஆக்கிரமிப்பதற்கு ரஸ்யா தயாராகி வருகின்ற நிலையில், தமது குடிமக்களை அங்கிருந்து 48 மணித்தியாலங்களுக்குள் வெளியேறுமாறு பல நாடுகளும் கோரிக்கைகயை முன்வைத்துள்ளன.



இங்கிலாந்து, கனடா, நெதர்லாந்து, லாட்வியா, ஜப்பான் மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகளே இந்த கோரிக்கையை விடுத்துள்ளன.



தமது குடிமக்கள் அடுத்த 48 மணி நேரத்திற்குள் வெளியேற வேண்டும் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது.



ரஸ்யாவின் படையெடுப்பு வான்வழி குண்டுவீச்சுடன் ஆரம்பிக்கலாம். இது குடிமக்களுக்கு பாாிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று வெள்ளை மாளிகை எச்சரித்துள்ளது.



எல்லைக்கு அருகில் 100,000 துருப்புக்கள் நிறுத்தப்பட்டுள்ளபோதும், யுக்ரைன் மீது படையெடுப்பதற்கான எந்த திட்டமும் இல்லை என்று மொஸ்கோ தெரிவித்துள்ளது.



மேற்கத்திய நாடுகளே தவறான தகவல்களை பரப்புவதாக ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சகம் குற்றம் சுமத்தியுள்ளது



முன்னதாக, அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் எண்டனி பிளிங்கன், எல்லையில் ரஷ்யப் படைகளின் அதிகரிப்பு ரஷ்ய விரிவாக்கத்தின் மிகவும் கவலைக்குரிய அறிகுறிகளாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.



இந்தநிலையில் ரஷ்ய நடவடிக்கையின் போது சிக்கித் தவிக்கும் எந்தவொரு குடிமக்களையும் மீட்க தமது துருப்புக்களை அனுப்பப் போவதில்லை என்று அமெரிக்க ஜனாதிபதி பைடன் தெரிவித்துள்ளார்.



இதேவேளை அமெரிக்க ஜனாதிபதி பைடன் மற்றும் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரோன் இருவரும் இன்று ரஸ்ய ஜனாதிபதி புட்டினுடன் பேச்சுவார்த்தையை நடத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



2014 ஆம் ஆண்டு முதல் யுக்ரைனின் கிழக்கு டான்பாஸ் பகுதியில் ஆயுதமேந்திய கிளர்ச்சிக்கு ரஷ்யா ஆதரவளித்து வருகிறது.



இந்த மோதல்களில் இதுவரை 14,000 பொதுமக்கள் இறந்துள்ளனர். இந்த கிழக்கு யுக்ரேனில் மோதலை முடிவுக்குக் கொண்டுவர ஏற்கனவே உடன்படிக்கைகளும் செய்துக்கொள்ளப்பட்டுள்ளன.



தற்போதைய மோதல் நிலையை முடிவுக்கு கொண்டு வர இந்த உடன்படிக்கைகளை மீளமைக்கமுடியும் என்று கருத்துக்கள் வெளியாகியுள்ளன.



இந்த உடன்படிக்கைகளை யுக்ரைன், ரஷ்யா, பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் ஆதரிக்கின்றன என்பதும் முக்கிய விடயமாகும்.








வரவிருக்கும் நிகழ்வுகள்
Jan13

அமெரிக்க ஏர்லைன்ஸ் விமானத்தில் திடீரென பயணி ஒருவர் வி

Mar24

உக்ரைன் மீதான ரஷ்ய போர் கடந்த 28 நாளாக நீடித்து வரும்

Sep12

அமெரிக்காவில் இரட்டை கோபுரம், பென்டகன் உள்ளிட்ட இடங்க

May13

சுவிட்சர்லாந்தின் ரேகா (Rega) எனப்படும் தனியார் ஏர் அம்பு

Sep11

அமெரிக்காவில் துப்பாக்கி வன்முறை கலாசாரம் வளர்ந்து வ

Oct18

கொரோனா வைரஸ் பெருந்தொற்று நெருக்கடியின்போது இந்தியா

Aug24

ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகளுக்கும் அந்நாட்

May28

சீனாவின் ஷாங்காய் நகரில் கடும் ஊரடங்கு அமல்படுத்தப்ப

Oct21

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப். கடந

Mar08

உக்ரைனில் கடுமையாக போர் நடந்து வருவதால், அங்கிருந்து

Mar20

சர்வதேச விண்வெளி நிலையத்தில் பணியாற்றும் மூன்று ரஷ்ய

Jan18

இந்தோனேசியா நாடு நெருப்பு வளையம் என்று அழைக்கப்படும்

Apr20

சீனாவின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைர

May10

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் போகோ ஹரம் பயங்கர

Mar12

உக்ரைன் தலைநகர் கீவ் மீது இன்னும் ஒரு சில தினங்களில் ர