More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • இலங்கையில் சிக்கிய அதிசொகுசு வாகனங்கள் - தடையை தாண்டி வந்தது எப்படி?
இலங்கையில் சிக்கிய அதிசொகுசு வாகனங்கள் - தடையை தாண்டி வந்தது எப்படி?
Feb 14
இலங்கையில் சிக்கிய அதிசொகுசு வாகனங்கள் - தடையை தாண்டி வந்தது எப்படி?

இலங்கைக்கு சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட ரோல்ஸ் ரொய்ஸ், லெம்போகினி, ஜகுவார், மெர்சீடிஸ் பென்ஸ், ஹமர் மற்றும் பேருந்துகள் இரண்டினை ஏலமிடுவதற்கு சுங்க பிரிவு மேற்கொண்டிருந்த தீர்மானம் இறுதி சந்தர்ப்பத்தில் திடீரென நிறுத்தப்பட்டுள்ளது.



சுங்கத்தால் கைப்பற்றப்பட்ட சொகுசு வாகனங்கள் எதிர்வரும் வியாழன் அன்று ஏலம் விடப்படும் என விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.



சுங்கத்துறை பிரிவு இயக்குநர் நாயகம் ஜி.வி. ஹரிப்ரியவின் அறிவுறுத்தலின் பேரில் 11 மணியளவில் ஏலம் நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. எப்படியிருப்பினும் ஏலம் நிறுத்தப்பட்டதற்கான காரணங்கள் குறித்து மேலதிக தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.



கைப்பற்றப்பட்ட வாகனங்கள் சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்டதால் அதன் உரிமையாளர் தெரியவில்லை எனவும் சில வாகனங்களின் பாகங்கள் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.



இலங்கையில் தற்போது வாகன இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தக் காலப்பகுதியில் இந்த அதிசொகுசு வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டதாக சுங்கத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.



இதேவேளை, கைப்பற்றப்பட்ட வாகனங்களை ஏலம் விடுவதற்கான டெண்டர் நடைமுறைகள் உள்ளதாகவும், சுங்கத் திணைக்களத்திற்கு வருமானம் ஈட்டுவதற்காக இவ்வாறான ஏலங்கள் நடத்தப்படுவதாகவும் சுங்கப் பேச்சாளர் சுதத் டி சில்வா தெரிவித்துள்ளார்.



அத்தகைய ஏலங்களை நடத்துவதற்கும் இடைநிறுத்துவதற்கும் சுங்கப் பணிப்பாளர் நாயகத்துக்கும் அதிகாரம் உண்டு என அவர் மேலும் குறிப்பிட்டு்ளளார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
May29

இலங்கைக்கு இன்றையதினம் (29-05-2022) டீசல் அடங்கிய கப்பல் ஒன்ற

Mar19

முதற்கட்டமாக ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்புகள் வழங்கப

Oct04

யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை ஊரிப் பகுதியில் மூன்று லிட்

Jan22

கலைஞர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் மருத்துவ உதவி விப

Mar28

இறக்குமதி செய்யப்பட்ட இந்திய முட்டைகளைப் பயன்படுத்த

Dec30

இலங்கையின் அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்த

Aug13

அதிபர் – ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சினையை தீர்ப்பத

Feb10

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு பயணிகள் ரயில

Aug02

சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி

Jan20

கொரோனா வைரஸ் தொற்றால் நாட்டில் மேலும் மூவர் உயிரிழந்த

Oct02

இலங்கையில் கொரோனா வைரஸ் பரவல் இன்னமும் முழுமையான கட்ட

Oct04

சட்டவிரோதா மீன்பிடி நடவடிக்கையினால் பாதிக்கப்பட்டுள

Jan27

கொவிட்-19 நோயாளிகளுக்கான மருத்துவ மேற்பார்வைக் காலத்த

May17

காலி முகத்திடல் சம்பவம் தொடர்பில் மேல் மாகாண சபையின்

Apr02

இயேசு மரணத்தில் இருந்து உயிர்த்தெழுந்தமையை மகிழ்வுட