More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • இந்தோனேசியாவில் பெரும் சோகம்-11 பேரின் உயிரைப்பறித்தது கோர அலை....
இந்தோனேசியாவில் பெரும் சோகம்-11 பேரின் உயிரைப்பறித்தது கோர அலை....
Feb 14
இந்தோனேசியாவில் பெரும் சோகம்-11 பேரின் உயிரைப்பறித்தது கோர அலை....

இந்தோனேசியாவில் இராட்சத அலையில் சிக்கிய 11 பேர் உயிரிழந்த சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா மாகாணத்தில் உள்ள ஜெம்பர் மாவட்டத்தில் பயங்கன் என்ற கடற்கரை உள்ளது. இந்த கடற்கரையில் நேற்று பாரம்பரிய சடங்கு நிகழ்ச்சி ஒன்று நடந்து. இதையொட்டி 20-க்கும் அதிகமானோர் கடற்கரையில் திரண்டு சடங்குகளை செய்து கொண்டிருந்தனர்.



அப்போது கடலில் திடீரென எழுந்த இராட்சத அலை கரையில் நின்று கொண்டிருந்த 23 பேரை உள்ளே இழுத்து சென்றது. இதனால் அங்கு பெரும் பதற்றம் உருவானது.



இதையடுத்து அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீவிர மீட்பு பணியில் இறங்கினர். எனினும் அதற்குள் 12 பேர் தாமாக நீந்தி கரை சேர்ந்தனர். மாயமான 11 பேரை தேடும் பணியில் மீட்பு குழுவினர் ஈடுபட்டனர். எனினும் பல மணி நேர தேடுதல் வேட்டைக்கு பின் அவர்கள் 11 பேரும் பிணமாக மீட்கப்பட்டனர்.



பாரம்பரிய சடங்கு நிகழ்ச்சியின் போது இராட்சத அலையில் சிக்கி 11 பேர் உயிரிழந்தது இந்தோனேசியாவில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Aug07

சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நா

Mar04

உக்ரைனில் ரஷ்ய துருப்புகளின் கை ஓங்கியுள்ளதாக தகவல் வ

Mar24

கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்பட

Aug13

ஆப்கானிஸ்தானில் அந்நாட்டு அரசுக்கும் தலிபான்களுக்கு

Mar03

இங்கிலாந்தில் கடந்த 1940 முதல் 1945 வரை பிரதமராக இருந்தவர்

Mar16

ரஷ்யா - உக்ரைன் போர் இன்றுடன் 20 ஆவது நாளாக தொடர்ந்து தீவ

Feb05

வெளிநாட்டு பயணிகள் நாட்டுக்குள் நுழைய இரண்டு வார காலத

Mar05

 உக்ரைன் கடற்கடையில் நேட்டோ உறுப்பினர் நாடான எஸ்டோன

Jun12

உக்ரைனுக்கு எதிரான ஆக்கிரமிப்பு

உக்ரைனுக்கு எதி

Aug28