பிக்பாஸ் அல்டிமேட்டில் வனிதா வெளியேறியதை அடுத்து, போட்டியாளர்களுக்கு நேற்றைய தினம் கொடுக்கப்பட்ட டாஸ்க் தற்போதும் நீடித்து வருகின்றது.
முன்னாள் காதலியான அபிராமியிடம் நிரூப் இன்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இருவருக்கும் வாக்குவாதம் முற்றிய நிலையில், அபிராமி பாத்ரூமிற்குள் சென்று கதவைப் பூட்டிக் கொண்டார்.
ஒட்டுமொத்த போட்டியாளர்களும் கூச்சல் போட்டுக்கொண்டு கதறிய தருணத்தில், இறுதியில் பாத்ரூம் கதவு உடைக்கப்பட்டது. இன்று வெளியான ப்ரொமோ காட்சியால் பிக்பாஸ் வீட்டிற்குள் என்ன நடக்கின்றது என்பதைக் காண ரசிகர்கள் ஆர்வமாக இருக்கின்றனர்.
ஆனால் அடுத்த ப்ரொமோ காட்சியில் ஜுலியின் ஓவர் நடிப்பு வெளியாகியதால், சினேகன் மற்றும் பாலா ஜுலிக்கு அட்வைஸ் செய்ய ஜுலியோ அடுத்த வனிதாவாக மாறி கூச்சல் போடுகின்றார்.