More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • ஹீரோவாக மாறிய மு.க.ஸ்டாலின் - ஜெயலலிதா பிறந்தநாளில் தமிழக அரசு செய்த செயலால் மக்கள் வியப்பு
ஹீரோவாக மாறிய மு.க.ஸ்டாலின் - ஜெயலலிதா பிறந்தநாளில் தமிழக அரசு செய்த செயலால் மக்கள் வியப்பு
Feb 25
ஹீரோவாக மாறிய மு.க.ஸ்டாலின் - ஜெயலலிதா பிறந்தநாளில் தமிழக அரசு செய்த செயலால் மக்கள் வியப்பு

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக அரசு செய்த செயல் பொதுமக்களிடையே பாராட்டைப் பெற்றுள்ளது. 



மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 74வது பிறந்தநாளை இன்று அதிமுக தொண்டர்கள் உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர். இதனை முன்னிட்டு பல இடங்களில் நலத்திட்ட உதவிகள், அன்னதானம் உள்ளிட்ட பல நிகழ்வுகள் நடைபெற்றன. 



அந்த வகையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமைக்கழகமான எம்ஜிஆர் மாளிகையில் உள்ள ஜெயலலிதாவின் திருவுருவச்சிலைக்கு அதிமுக சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.



இதனிடையே இன்று காலை நாளிதழ்களை பார்த்தப்போது அதில் இடம்பெற்ற ஒரு விளம்பரம் பொதுமக்களை வெகுவாக கவர்ந்தது. தமிழக அரசு சார்பில் வெளியான அந்த விளம்பரத்தில் ஜெயலலிதா போட்டோவுடன் முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்களின் 74-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை காமராஜர் சாலையில் உள்ள டாக்டர் ஜெ.ஜெயலலிதா வளாகத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் நிறுவப்பட்டுள்ள அவரது திருவுருவச்சிலைக்கு சீர்மிகு பெருமக்கள் தனிமனித இடைவெளியைக் கடைப்பிடித்து மலர்தூவி மரியாதை செலுத்துவார்கள் என்ற வாசகமும் இடம் பெற்றிருந்தது. 



பொதுவாக இதுவரை இப்படியான மாண்பை தமிழக அரசியலில் கண்டதில்லை என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். மறைந்த முன்னாள்  முதலமைச்சருக்கு திமுக அரசு இப்படியான மரியாதையை செய்த நிலையில் அதிமுக ஆட்சியில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்தநாள், நினைவுநாளுக்கு எந்தவித முறையும் பின்பற்றிய மாதிரி நினைவில் இல்லை என அதில் கூறியுள்ளனர். 



ஜெயலலிதா இறந்தபோதும், அவரைப் பற்றி சட்டசபையில் இரங்கல் குறிப்பு வாசித்த போதும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரை பெருமையாக பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது. 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Apr12

கொரோனா காலத்தில் மாணவர்கள் பாதுகாப்பு சாத்தியம் இல்ல

Mar19

கடலூர் அருகே தனியார் ஏடிஎம் மையத்தில் பணம் வைத்த நபரே

May29

லட்சத்தீவு மக்களின் வாழ்க்கை,

May11

இந்தியா தனது படைகளை இலங்கைக்கு அனுப்புவது குறித்து ஊட

Aug22

திரிபுரா மாநில காங்கிரஸ் செயல் தலைவராக பதவி வகித்தவர்

Jun20

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து இன்று மத

Aug14

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க. வ

Dec28

 மருத்துவமனைகளில் நேற்று கொரோனா ஒத்திகை நடந்தது. டெல

Aug10

பெகாசஸ் விவகாரம், விவசாயிகள் போராட்டம், பெட்ரோல் விலை

Jun22

தேர்தல் வியூகங்களை வகுப்பதில் வல்லுனராக கருதப்படுபவ

Mar06

தமிழக சட்டசபைக்கு ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ம் தேதி தேர்தல்

Feb26

சென்னையில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி தேர்த

Aug14

அனைத்துச்சாதியினரும் அர்ச்சகராகும் வகையில் அப்போதைய

Aug06

சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே உள்ள சித்தத்த

Feb25

அசாம் மாநிலத்தில் பிரசார பயணம் மேற்கொண்டுள்ள உள்துறை