More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • விமானியின் திடீர் செயற்பாட்டால் பயணிகள் ஆர்ப்பாட்டம்
விமானியின் திடீர் செயற்பாட்டால் பயணிகள் ஆர்ப்பாட்டம்
Jan 22
விமானியின் திடீர் செயற்பாட்டால் பயணிகள் ஆர்ப்பாட்டம்

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்துக்கு வரவேண்டிய விமானத்தை, தனது வேலை நேரம் முடிந்து விட்டது என கூறி சவுதி அரேபியாவில் பாதி வழியிலேயே விமானத்தை நிறுத்திவிட்டு விமானி ஒருவர் கிளம்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.



பாகிஸ்தான் நாட்டின் தேசிய விமான நிறுவனமான பாகிஸ்தான் இன்ரநஷனல் ஏர்லைன்ஸுக்கு சொந்தமான விமானம் (PK-9754 ) ஒன்று ரியாத் நகரில் இருந்து இஸ்லாமாபாத்துக்கு புறப்பட்டது. இடையே வானிலை மோசமடைந்ததால், சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் அந்த விமானத்தை விமானி அவசரமாக தரையிறக்கினார்.



பின்னர் வானிலை சரியானதால் விமானம் இஸ்லாமாபாத்துக்கு புறப்படும் என நினைத்த பயணிகளுக்கு விமானி அதிர்ச்சியளித்தார். தனது வேலை நேரம் (Flying Hours) நிறைவடைந்துவிட்டதாக கூறிய அவர் மேற்கொண்டு விமானத்தை தன்னால் இயக்க முடியாது என கூறி விமானத்தை இயக்க மறுத்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்



வானிலை மாற்றத்தால் ஏற்கனவே இஸ்லாமாபாத் செல்ல வேண்டிய விமானம் சில மணி நேரங்களாக தமாம் விமான நிலையத்தில் காத்திருக்க வேண்டியிருந்த நிலையில் மேற்கொண்டு தாமதமானதால் பொறுமையிழந்த பயணிகள் விமானத்தை இயக்கச் சொல்லி கூச்சல் போட்டுள்ளனர். தங்களால் விமானத்தை விட்டு இறங்க முடியாது என கூறி அவர்கள் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.



நிலைமை மோசமடைந்ததை அடுத்து விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. அந்த விமானத்தில் இருந்த பயணிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. பின்னர் அவர்கள் அனைவரும் தற்காலிகமாக ஹோட்டல் ஒன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்டு தங்கவைக்கப்பட்டனர். இவர்கள் அனைவரும் மாற்று விமானி வந்தபின்னர் இஸ்லாமாபாத்துக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் என விமான நிறுவனம் தரப்பில் கூறப்பட்டது. 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar03

 உக்ரேன் மீதான ஆக்கிரமிப்பை ரஷ்யா நிறுத்தக் கோரி ஐ.ந

Mar10

இந்த நூற்றாண்டின் விதியை தீர்மானிக்க போகும் மிகப்பெர

Aug25

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதை

Jul06

பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள சுலு மாகாணத்தின் ஜோலோ தீவு

Mar01

அரபிக்கடலில் இந்தியா-பாகிஸ்தான் எல்லை பகுதியான சர் கி

May18

உக்ரைனின் டெனெட்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள குடியிருப

Jun03

உலகில் முதன் முதலாக கொரோனா தொற்று சீனாவில் அறியப்பட்ட

Oct31

இந்தியா உள்ளிட்ட 20 நாடுகளை உள்ளடக்கிய ஜி-20 அமைப்பின் உச

May09

கொழும்பில்  கலவரம் வெடித்துள்ள நிலையில் சற்று முன்ன

May30

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன். (56),  தன்னை விட 24 வய

Feb06

வகுப்பறைகளில் கிறிஸ்தவ பிள்ளைகள் பர்தா ஆடை அணிய கட்டா

Oct02

கிழக்கு உக்ரேனிய நகரமான லைமான், உக்ரேனியப் படைகளால் ச

Apr22

ரஷியா - உக்ரைன் இடையே போர் நடந்து வரும் நிலையில் மறுபுற

Feb23

நடப்பாண்டில் உலகப் பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவி

Mar04

கடந்த செவ்வாய் கிழமை வரை அமெரிக்காவில் தங்கியிருக்கு