More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • சுந்தர் பிச்சை உள்ளிட்டவர்களுக்கு எதிராக வழக்கு!
சுந்தர் பிச்சை உள்ளிட்டவர்களுக்கு எதிராக வழக்கு!
Jan 27
சுந்தர் பிச்சை உள்ளிட்டவர்களுக்கு எதிராக வழக்கு!

கூகுள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை உள்ளிட்ட ஆறு பேருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



இந்திய ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த செய்தியில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “மும்பையைச் சேர்ந்த பிரபல பாலிவுட் இயக்குநர் சுனில் தர்சன்.



இவர் 2017ம் ஆண்டு இயக்கி வெளியான படம் 'Ek Haseena Thi Ek Deewana Tha'. இந்தப் படத்தை மர்ம நபர்கள் சட்ட விரோதமாக யூடிபில் பதிவேற்றம் செய்துள்ளனர். இதையடுத்து இதை லட்சக்கணக்கானோர் பார்வையிட்டுள்ளனர்.



அதேபோல் இயக்குநர் சுனில் தர்சன் இப்படத்திற்கான காப்புரிமை இதுவரை யாருக்கும் கொடுக்கவில்லை. இதனால் காப்புரிமை சட்டத்தின் கீழ் கூகுள் சிஇஒ சுந்தர் பிச்சை மீது மும்பை நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்துள்ளார்.



இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் காப்புரிமை சட்ட விதிகளை மீறியதாகக் கூறி, சுந்தர் பிச்சை உள்ளிட்ட ஐந்து அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து மும்பை போலிஸார் ஐந்து பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.



இது குறித்து இயக்குநர் சுனில் கூறுகையில்,"எனது படத்திற்கான காப்புரிமையை நான் யாருக்கும் கொடுக்கவில்லை. நான் யூடியூபிற்கு எதிராகப் பல ஆண்டுகளாகப் போராடி வருகின்றனர்.ஆனால் அவர்களிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை. எனது படத்தை யூடியூபில் பதிவேற்றி அதில் சம்பாதிக்கிறார்கள். எனவேதான் நான் தற்போது நீதிமன்றத்தை நாடியுள்ளேன். நீதிமன்றமும் வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளது" என தெரிவித்துள்ளார்.  






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar17

இந்தியாவில் கடந்த டிசம்பர் 2-ம் வாரத்தில் இருந்து இதுவ

Apr25

தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் மின்னல் வேகத்தில் அ

Aug18

அழகிரியும், பாஜக வில் இணைகின்ற நாளை உருவாக்குவோம் என்

Mar12

தூத்துக்குடி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் 100 சதவீ

Nov04

செங்கல்பட்டு மாவட்டம் பூஞ்சேரி பகுதியில் வாழும் நரிக

Apr27

இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை கடந்த சில வாரங்க

Apr28

தேசிய மாநாட்டுக் கட்சியின் துணைத் தலைவரும், ஜம்மு காஷ

May12

கிளிநொச்சி - இரணைதீவு கடற்பரப்பில் கடந்த மார்ச் மாதம்

Mar28

பிரதமர் நரேந்திர மோடி தனது 2 நாள் வங்கதேச பயணத்தை முடித

Jul11

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சா

May03

விசாரணைகளின் குறைப்பாடுகளை கூறி காலத்தை வீணடிக்காது

Jun19

பிரதமர் மோடியை என்னதான் கொரோனா தொற்று விவகாரத்தில் எத

Jan17

இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே நீண்ட காலமாக எல்ல

Jun20
Jun22

தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி அமைந்த பின்னர் முதல் சட்டமன்