மருத்துவ பீட மாணவர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், ராகமவில் அமைந்துள்ள களனி பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் விடுதி மீதே குழுவொன்று தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் காவல்துறையினரின் ஆரம்பக்கட்ட விசாரணையின் போது, வெளியில் இருந்து வந்த குழுவினராலேயே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
தாக்குதலில் காயமடைந்த மூன்று பல்கலைக்கழக மாணவர்கள் ராகம போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் ஒருவர் நீர்கொழும்பு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
எனினும் தாக்குதல் நடத்தியவர்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.