இந்தியாவிடமிருந்து 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை பெற்றுக் கொள்வதற்கான ஒப்பந்தம் இன்று மாலை கைச்சாத்திடப்படவுள்ளதாக தென்னிலங்கை ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
நாட்டில் தற்பொழுது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியினை குறைத்துக் கொள்ளும் வகையில் எரிபொருள் கொள்வனவிற்காக இந்தியாவிடமிருந்து 500 மில்லியன் அமெரிக்க டொலரை இலங்கை அரசாங்கம் இந்தியாவிடம் கடனாக கோரியிருந்தது.
இதற்கு இந்தியாவும் அனுமதி வழங்கியிருந்த நிலையில் குறித்த கடன்தொகை எரிபொருள் கொள்வனவிற்கு பயன்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.