வென்னப்புவ பகுதியில் புகையிரதத்தில் மோதி நபர் ஒருவர் உயிரிழந்திருப்பதாக பொலிஸார் தகவல் தெரிவித்துள்ளனர்.
சிலாபத்தில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணம் செய்த புகையிரதத்தில் மோதியே குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.
மேலும் இவ்வாறு உயிரிழந்த நபர் தொடர்பில் இதுவரை எவ்விதத் தகவலும் கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, உருக்குலைந்த நிலையில் மீட்கப்பட்ட சடலம் நீர்கொழும்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இச் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை வென்னப்புவ பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.