More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • தீவிரமடையும் யுத்த களமுனை - இலங்கையை காப்பாற்ற தயாராகும் ரஷ்யா
தீவிரமடையும் யுத்த களமுனை - இலங்கையை காப்பாற்ற தயாராகும் ரஷ்யா
Mar 16
தீவிரமடையும் யுத்த களமுனை - இலங்கையை காப்பாற்ற தயாராகும் ரஷ்யா

உக்ரைன் ரஷ்யாவுக்கு இடையில் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், இலங்கைக்கு சாதகமான நிலைப்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.



பொருளாதார ரீதியில் ரஷ்யாவை மேற்குலக நாடுகள் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில், பெரும் சிக்கலில் புடின் அரசாங்கம் மாட்டியுள்ளது.



இந்நிலையில் இலங்கை மற்றும் இந்தியாவிற்கு மிகக் குறைந்த விலையில் கச்சா எண்ணெயை வழங்க ரஷ்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.



ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் பெறுவது குறித்து பேச்சு வார்த்தை நடந்து வருவதாக அரசாங்கத்தின் உயர்மட்ட தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.



கச்சா எண்ணெயை பெறுவதற்காக ரஷ்யா மீது மேற்குலக நாடுகள் விதிக்கும் தடைகள் இலங்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தாது. அத்துடன் ரஷ்யாவிடமிருந்து இலங்கைக்கு எண்ணெயைப் பெற்றுக்கொள்ள முடியும். ரஷ்யாவின் நட்பு நாடுகள் என்ற வகையில் இலங்கை மற்றும் இந்தியாவுக்கு கச்சா எண்ணெயை அதிகரித்து வரும் சந்தை விலையை விட குறைவான விலையில் வழங்கப்படவுள்ளதாக தெரியவந்துள்ளது.



அதற்கமைய, இலங்கைக்கு கச்சா எண்ணெய் கப்பலை வழங்க ரஷ்யா இணக்கம் தெரிவித்துள்ளது. ஷெல் நிறுவனம் பல வருடங்களுக்கு முன்னர் இலங்கையை விட்டு வெளியேறியதன் பின்னர் ரஷ்யா இலங்கைக்கு எண்ணெய் வழங்கும் நாடாக செயற்பட்டு வருகின்றது.



ரஷ்யாவிடமிருந்து மலிவான விலையில் எண்ணெயை பெறுவதன் மூலம் இலங்கையில் எண்ணெய் விலையை அரசாங்கம் குறைக்க முடியும் என கூறப்படுகின்றது.



இலங்கையில் ஏற்பட்டுள்ள டொலர் நெருக்கடி காரணமாக எரிபொருளின் விலைகள் வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ள நிலையில், அதற்கு பெரும் தட்டுப்பாடும் நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jun07

தற்போது கொவிட்-19 பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், எதிர்

Mar19

பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவின் அழைப்பினை ஏற்று இரண

Mar20

முல்லைத்தீவு மாவட்டம் - புதுக்குடியிருப்பு பகுதியில்

Sep28

பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திர

Feb11

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சற்றுமுன்னர் நாடாளுமன்றத்

Feb04

இலங்கையின் 73ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் ஜனாதிபதி கோட

Aug22

நாளை முதல் இனிவரும் காலங்களில் எந்தவொரு சமையல் எரிவாய

Apr12

தென்மராட்சி அல்லாரையில் நள்ளிரவில் வீடு புகுந்த கொள்

Mar13

முன்னொருபோதுமில்லாத அளவுக்கு நாடு பெரும் பொருளாதார ந

Mar09

காணாமல் போனோர் தொடர்பிலான முறைப்பாடுகளை நிறைவுக்கு க

Mar06

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் பங்கேற்கும் “கிரா

Jan12

2022 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உயர்தரம், தரம் 5 புலமைப்பரிசில

Jan25

மேல் மாகாணத்தில் 11ஆம் வகுப்பு மாணவர்களின் நலன் கருதி ச

Mar05

இலங்கைக்கு மேலும் கடன் வழங்குவதைத் தவிர்ப்பது குறித்

Jan19

நாடாளுமன்றம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமைய