More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • போரை மே 9-ந்தேதிக்குள் முடிக்க ரஷியா திட்டம்- உக்ரைன் ராணுவம் தகவல்
போரை மே 9-ந்தேதிக்குள் முடிக்க ரஷியா திட்டம்- உக்ரைன் ராணுவம் தகவல்
Mar 25
போரை மே 9-ந்தேதிக்குள் முடிக்க ரஷியா திட்டம்- உக்ரைன் ராணுவம் தகவல்

உக்ரைன் மீது ரஷியா தொடங்கிய போர் ஒரு மாதத்தை கடந்தது. இன்று 30-வது நாளாக தாக்குதல் நீடித்து வருகிறது.



தலைநகர் கீவ், கார்கிவ், மரியுபோல் உள்ளிட்ட அனைத்து நகரங்களிலும் ரஷிய படைகள் தங்களது தாக்குதலை இடைவிடாமல் நடத்தி வருகின்றன.



உக்ரைன் நாட்டை மூன்று முனைகளில் ரஷிய படைகள் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்துகின்றன. உக்ரைனின் சில நகரங்களை ரஷியா தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டது.



ஆனால் கீவ், கார்கிவ் உள்ளிட்ட பெரிய நகரங்களை ரஷியா இன்னும் கைப்பற்றவில்லை. ரஷிய படைகளுக்கு எதிராக உக்ரைன் ராணுவத்தினர் கடும் சவால் அளித்து வருகிறார்கள். கீவ் புறநகரில் ரஷியா கைப்பற்றிய ஒரு பகுதியை உக்ரைன் ராணுவம் மீட்டது. இதனால் ரஷிய ராணுவம் தங்களது தாக்குதலை கடுமையாக்கி உள்ளது.



இந்த நிலையில் உக்ரைன் மீதான போரை மே 9-ந்தேதிக்குள் முடிவுக்கு கொண்டு வர ரஷியா விரும்புவதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது.



இது குறித்து உக்ரைன் ஆயுத படைகளின் பொதுப் பணியாளர்களின் உளவுத் துறை கூறும்போது, “மே 9-ந் தேதிக்குள் போரை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்று ரஷிய துருப்புகளிடம் கூறப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளது.



மே 9-ந்தேதி ரஷியாவில் ஜெர்மனியின் நாஜி படையை வென்ற நாளாக கொண்டாடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.



இதற்கிடையே உக்ரைன் மக்கள் வலுக்கட்டாயமாக ரஷியாவுக்கு கொண்டு செல்லப்படுவதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது.



இது தொடர்பாக உக்ரைன் தரப்பில் கூறும்போது, “ஆயிரக்கணக்கான உக்ரைன் மக்கள் வலுக்கட்டாயமாக ரஷியாவுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். அவர்களில் சிலர் பணயக் கைதிகளாக பயன்படுத்தப்படலாம்.



இதன் மூலம் சரண் அடையுமாறு உக்ரைன் மீது அழுத்தம் கொடுக்கலாம். 84 ஆயிரம் குழந்தைகள் உள்பட 4 லட்சம் பேர் தங்கள் விருப்பத்திற்கு மாறாக ரஷியாவுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளது.



பெல்ஜியம் தலைநகர் பிரஸ்சல்சில் நடந்த நேட்டோ உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோபைடன் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-



நேட்டோ அமைப்பு இது வரை இவ்வளவு ஒற்று மையாக இருந்ததில்லை. இது ரஷிய அதிபர் புதினின் எதிர்பார்ப்பை பொய்யாக்கி உள்ளது.



உக்ரைனில் ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தி தாக்குதல் நடத்தினால் நேட்டோ படைகள் பதிலடி கொடுக்கும். பதிலடியின் தன்மை பயன்பாட்டின் தன்மையை பொறுத்து இருக்கும் என்றார்.



நேட்டோ உச்சி மாநாட்டில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, காணொலி மூலம் பேசும்போது, உக்ரைனுக்கு ஆதரவு அளித்தற்கும், ரஷியா மீது பொருளாதார தடைகளை விதிப்பதற்கும் இணைந்து பணியாற்றிய ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். ஆனால் இந்த நடவடிக்கைகள் முன்னதாக எடுக்கப்படவில்லை.



ஐரோப்பிய ஒன்றியத்தில் சேருவதற்காக உக்ரைனின் விண்ணப்பத்தை விரைவாக பரிசீலிக்க வேண்டும். இதில் தாமதிக்க வேண்டாம். எங்களுக்கு இது ஒரு வாய்ப்பு என்றார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb25

 ரஷ்யா உகரைன் மீது போர்தொடுத்துள்ள நிலையில் , ரஸ்யாவ

Aug04

மத்திய ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான காங்கோவின் கிழக்க

Apr22

ரஷியா - உக்ரைன் இடையே போர் நடந்து வரும் நிலையில் மறுபுற

Jan04

தைவானின் கிழக்கு கடற்கரை பகுதியில் அமைந்துள்ளது ஹுயல

Mar27

சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நா

Mar04

கொரோனா வைரஸ் பரவல், உலகுக்கு இன்னும் அச்சுறுத்தலாகவே

Jun25

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்று, கென்யா. அந்த நாட்டின் 23 ராண

Aug31

அமெரிக்க அதிபர் ஜோ பைடன்  இன்று நாட்டு மக்களிடம் உரை

Mar25

இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத்தின் மகள் வழி பேத்தியும்

Apr13

இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் முதன் முறையாக

Oct06

ஜம்மு காஷ்மீரின் பண்டிபோரா மாவட்டத்தில் மருந்துக்கட

Mar25

மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டம் நாளுக்க

Sep06

ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகள் வெளியேறியதையடுத்து

Jan20

ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நவால்னியை விடுதலை செ

Oct14

சீனாவின் ஷாங்காய் நகரில் அதிகரித்து வரும் கொரோனா தொற்