More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • இலங்கையில் முப்பது வருட கால யுத்தத்தின் போது பிறப்பிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டது
இலங்கையில் முப்பது வருட கால யுத்தத்தின் போது பிறப்பிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டது
Mar 28
இலங்கையில் முப்பது வருட கால யுத்தத்தின் போது பிறப்பிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டது

இலங்கையில் முப்பது வருட கால யுத்தத்தின் போது விதிக்கப்பட்ட உள்நாட்டு விமான சேவைகளுக்கான இரவு நேர விமானங்களுக்கான தடை நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 



சூரிய அஸ்தமனம் முதல் சூரிய உதயம் வரையிலான விமானங்கள் தொடர்பாக உள்நாட்டு விமானப் பயணிகளுக்கு பல தசாப்தங்களாக விதிக்கப்பட்டிருந்த தடை சிவில் விமான போக்குவரத்து அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் கெப்டன் தெமியா அபேவிக்ரமவால் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.



விமானச் சேவைகள் இராஜாங்க அமைச்சர் டி.வி.சானக்கவின் அனுமதியுடன் இந்தத் தடை நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.



இது தொடர்பில் தெமியா அபேவிக்ரம கூறுகையில்,



இலங்கையில் முப்பது வருட கால யுத்தத்தின் போது இந்த தடை விதிக்கப்பட்டிருந்தது. அந்த நேரத்தில் கட்டுப்பாடு நடைமுறையில் இருந்த போதிலும், இது உள்நாட்டு விமானப் போக்குவரத்துத் துறைக்கு தேவையற்ற சுமைகளை ஏற்படுத்தியுள்ளது.



இந்த கட்டுப்பாடு காரணமாக சில விமான இயக்குனர்கள் தங்கள் பணியாளர்களுக்கும், பயணிகளுக்கும் திட்டமிடப்படாத தங்கும் இடங்களை வழங்க வேண்டியிருந்தது. இதனால் இயக்குனர்களுக்கு கூடுதல் செலவாகும்.



இதேவேளை தடை நீக்கப்பட்டாலும், விமானிகள் மற்றும் விமான இயக்குனர்கள் மாலைநேரம் மற்றும் அதிகாலைக்கு இடையில் செயற்படும் போது இரவு நேர பறத்தலுக்கான விதிகளை பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb25

கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயம் மற்றும் சுகாதாரப்

May02

நாட்டில் தற்போது நிலவும் அரசியல் மற்றும் பொருளாதார நெ

Sep20

நாடாளுமன்றத்தின் மாதாந்த மின் கட்டணம் 60 இலட்சம் ரூபாய

Sep26

யாழ்ப்பாணம் தாவடி பகுதியில் உள்ள வீடொன்றின் மீது வன்ம

Oct02

முச்சக்கர வண்டி கட்டணத்தை குறைப்பது தொடர்பில் அவதானம

Apr06

யுவதி ஒருவரின் துண்டான கையை 4 மணி நேர சத்திர சிகிச்சைக்

Feb01

ஒமிக்ரோன் எனப்படும் புதிய கோவிட் மாறுபாடு சிறுவர்கள்

Aug25

சீன இராணுவத்தினரால், இலங்கை முப்படையினருக்கு 300,000 சைனோ

Mar15

இலங்கையில் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு நாடாளுமன

Mar16

உக்ரைன் ரஷ்யாவுக்கு இடையில் போர் தீவிரமடைந்துள்ள நில

Mar07

ஹம்பாந்தோட்டை மிரிஜ்ஜவிலயில் ஏற்றுமதிக்கு பதப்படுத்

Sep27

இலங்கையின் அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால்

May09

அனுராதபுரம் – திருகோணமலை பிரதான வீதியின் நொச்சியாகம

Sep24

கொழும்பில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் பாரிய போரா

Mar06

குருணாகல், நாரம்மல பொது நூலகத்துடன் கூடிய பிரதேச சபை க