நம் முகத்தின் அழகை கெடுப்பது கண்ணீர்க்கு கீழ் ஏற்படும் கருவளையம் தான்.
கருவளையம் ஏற்பட மன அழுத்தமும், தூக்கமின்மை, மன உளைச்சல், அதிக நேரம் செல்போன் உபயோகப்படுத்துவது, ஊட்டச்சத்து குறைபாடும் கூட ஒரு காரணமாக இருக்கலாம்.
இதனை செலவின்றி எளியமுறையில் நீக்க முடியும். தற்போது அவை என்னெ்னன என்பதை பார்ப்போம்.
- கண்களை முதலில் சுத்தமான நீரில் கழுவி விடுங்கள். பிறகு சுத்தமான காட்டனை எடுத்து பன்னீரில் நனைத்து கண்களின் மீது வைக்கவும். இவ்வாறு செய்வதால் கண்கள் குளிர்ச்சி அடைந்து கருவளையம் நாளடைவில் மறையும்.
- வெள்ளரிக்காயுடன் சம அளவு தக்காளி சேர்த்து நீர்விடாமல் அரைத்து அதன் சாறினை மட்டும் வடிகட்டி கண்களின் மீது தடவலாம்.
- உருளைகிழங்கை மிக்ஸியில் அடித்து அதன் சாறை பிழிந்து சுத்தமான காட்டனை அதில் நனைத்து சாறு இழுக்கும் வரை ஊறவிடவும். பிறகு அந்த காட்டனை எடுத்து கண்களின் மீது வைக்கவும்.
- பாதாமை சிறிது பாலுடன் சேர்த்து, பேஸ்ட் போல அரைத்து கருவளையம் இருக்கும் இடத்தில் தடவி 10-15 நிமிடம் ஊற வைத்து பின் கழுவினால் கண்களைச் சுற்றி இருக்கும் கருமையான வளையம் போய்விடும்.
- 1 ஸ்பூன் மஞ்சள் தூளில், 2 ஸ்பூன் அளவு தேன் கலந்து நன்றாகக் குழைத்து கருவளையம் இருக்கும் இடத்தில் பேக் போல் போட்டுக்கொள்ளலாம்.
- ஒரு ஸ்பூன் தக்காளி சாருடன் ஒன்றரை ஸ்பூன் எலுமிச்சை சாறைக் கலந்து கருவளையத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரினால் கழுவ வேண்டும். ஒரு சில வாரங்களில் கருவளையம் இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.
- சுத்தமான தேங்காய் எண்ணெயை பஞ்சில் தொட்டு கண்ணுக்கு அடியில் மசாஜ் செய்து வந்தால் நாளடைவில் கண் கருவளையம் மறையும்.
- பாலில் சிறிது குங்குமப்பூ சேர்த்து அதில் பஞ்சை நனைத்து கண்களில் வைத்து சிறிது நேரம் கழித்து கண்களைக் கழுவினால் கண் கருவளையம் மறையும்.
- மஞ்சளுடன் பாதாம் எண்ணெய் சேர்த்து கண்களுக்கடியில் மசாஜ் செய்தால் ஒரு வாரத்தில் கருவளையம் மறையும்.
- எலுமிச்சை சாறை பஞ்சில் நனைத்து கண்ணுக்கு அடியில் ஒத்தி எடுக்க வேண்டும். தினமும் இதை செய்து வந்தால் கருவளையம் மறையும்.