More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • வாகனம் கொள்வனவு செய்ய காத்திருப்பவர்களுக்கு அதிர்ச்சி தகவல்
வாகனம் கொள்வனவு செய்ய காத்திருப்பவர்களுக்கு அதிர்ச்சி தகவல்
Mar 04
வாகனம் கொள்வனவு செய்ய காத்திருப்பவர்களுக்கு அதிர்ச்சி தகவல்

வாகனம் கொள்வனவு செய்ய காத்திருப்பவர்கள் இனிமேலும் எதிர்பார்ப்புகளை வைத்துக் கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக வாகன இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.



வாகனங்களை இறக்குமதி செய்யும் திகதியை இந்நாட்டு மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர். இந்நிலையில் இன்னும் மூன்று ஆண்டுகளுக்கு வாகன இறக்குமதி நடைபெறாது என நாட்டின் முன்னணி வாகன இறக்குமதியாளர்கள் இன்று வெளிப்படுத்தியுள்ளதாக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.



அத்தியாவசியமற்ற 600 பொருட்களை இறக்குமதி செய்வதற்கு தடைவிதிக்க அரசாங்கம் எடுத்த தீர்மானம் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு இடமளிக்காது என்பதனை தெளிவுப்படுத்தியுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.



நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடியானது வாகனங்களை இறக்குமதி செய்யாது இருப்பதற்கு மற்றுமொரு சிறந்த உதாரணம் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.



நாட்டில் கோவிட் ஆரம்பித்தது முதல் வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டிருந்தால், இன்று நாம் காணும் எரிபொருள் வரிசை இன்னும் பல கிலோமீட்டர்களை கடந்திருக்கும் என வாகன இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.



அத்தியாவசியமற்ற பொருட்களுக்கான தடை, எரிபொருள் நெருக்கடி மற்றும் வாகனங்களை இறக்குமதி செய்யாமை உள்ளிட்ட அனைத்து விடயங்களுக்கும் நாட்டில் டொலர்கள் பற்றாக்குறையே பிரதான காரணமாகத் தோன்றுவதாக இறக்குமதியாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.



இந்த நிலையில், நாட்டில் தற்போதுள்ள வாகனங்களின் விலைகள் மக்கள் எதிர்பாராத வகையில் அதிகரிக்கலாம் என வாகன இறக்குமதியாளர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Apr17

அரசியல் கட்சிகளின் தலையீடுகள் இன்றி, ஜனாதிபதி அலுவலகத

Apr28

இலங்கையில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1.02 லட்சம் எ

Feb24

இலங்கையில் மீண்டும் சமையல் எரிவாயுக்கு தட்டுப்பாடு ஏ

Jun26

இலங்கையில் போர் முடிவுக்கு வந்து பன்னிரண்டு ஆண்டுகள்

May26

பருத்தித்துறை தும்பளையில் இடம்பெற்ற இறுதிச் சடங்கு ஒ

Apr04

இந்திய மீனவர்கள் இலங்கை கடல் எல்லைக்குள் மீன்பிடியில

Jan16

யாழில் இருந்து கொழும்புக்கு கொண்டு செல்லப்பட்ட 250 கி.க

Jul15

அரசியல் கட்சிகளின் தேவைக்கேற்ப, அவர்களின் வழிகாட்டலு

Apr04

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில், தற்போது

May19

நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட்ட பின்னா்

Mar10

பதுளை - மெட்டிகஹதென்ன பிரதேசத்தில் விசேட தேவையுடைய ஒர

Mar13

பாதுகாப்பற்ற நிலையில் தொடுக்கப்பட்டிருந்த மின்சார வ

Sep08

தமது கோரிக்கைகளுக்கான உரிய தீர்வொன்றை பெற்றுக்கொள்வ

Mar28

நாட்டு மக்கள் உணவுக்கு முக்கியத்தும் கொடுக்காமல் நாட

Mar25

13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் படி மாகாணசபைகள் என்