உக்ரைனின் பயங்கரமான போர் சூழலுக்கு மத்தியில், தலைநகர் கீவ் மற்றும் செர்னிஹிவ் ஆகிய நகரங்களில் உள்ள சூப்பர்மார்கெட்டில் தங்களுக்கான உணவு பொருள்களை வாங்குவதற்காக மக்கள் நீண்ட வரிசையில் நிற்பது தொடர்பான செயற்கைகோள் புகைப்படம் வெளியாகியுள்ளது.
உக்ரைனின் ரஷ்யா தனது கடுமையான ராணுவ தாக்குதலை தொடர்ந்து முன்னகர்த்தி வந்த நிலையில் தற்போது கெர்சன் என்ற நகரப்பகுதியை ரஷ்யா முழுவதுமாக தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளது.
இதனை அந்த பகுதியில் உள்ள உள்ளுர் அதிகாரிகளும் உறுதிப்படுத்தியுள்ள நிலையில், தலைநகர் கீவ், கார்க்கிவ் மற்றும் செர்னிஹிவ் ஆகிய பகுதியில் ரஷ்யா தனது தாக்குதலை மேலும் அதிகரித்து இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளன.