More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • கோட்டாபய பிறப்பித்துள்ள முக்கிய உத்தரவு
கோட்டாபய பிறப்பித்துள்ள முக்கிய உத்தரவு
Jun 04
கோட்டாபய பிறப்பித்துள்ள முக்கிய உத்தரவு

பயன்படுத்தப்படாத நிலங்ககளில் பயிரிடுவதற்கான வேலைத்திட்டம்



இலங்கையில் பெருந்தோட்ட நிறுவனங்களுக்குச் சொந்தமான பயன்படுத்தப்படாத நிலங்களை கண்டறிந்து, உணவுப் பயிர்களைப் பயிரிடுவதற்கான துரித வேலைத்திட்டத்தை தயாரிக்குமாறு அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார்.



பெருந்தோட்டத் துறையில் தொழிற்சாலைகள் மற்றும் ஏனைய தேவைகளுக்காக எரிபொருளை வழங்குவது தொடர்பிலும் அரச தலைவர் அவதானம் செலுத்தியுள்ளார்.



பெருந்தோட்டத்துறை எதிர்நோக்கும் சவால்கள் தொடர்பில் கொழும்பு கோட்டையிலுள்ள அரச தலைவர் மாளிகையில் நேற்று மாலை கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.



இதன்போது இலங்கையில் பெருந்தோட்ட நிறுவனங்களுக்குச் சொந்தமான 9 ஆயிரம் ஹெக்டேர்களுக்கும் அதிகமான நிலங்கள் பயிரிடப்படாத நிலையில் காணப்படுவதாக அரச தலைவர் சுட்டிக்காட்டினார்.



கோட்டாபய பிறப்பித்துள்ள முக்கிய உத்தரவு



 



இதனால் 23 தோட்ட நிறுவனங்களுக்குச் சொந்தமான அந்தக் காணிகளில் பயிரிடுபவர்களுக்கு அவற்றை வழங்க வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.



 



அரச தலைவரது பணிப்புரை



அத்துடன் தேயிலை ஏற்றுமதியினால் நாட்டிற்குக் கிடைக்கும் அந்நியச் செலாவணி வெளிப்படைத் தன்மையுடன் பேணப்பட வேண்டும் எனவும் அதற்காக தேயிலை ஏலத்தை டொலர்களில் நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து உடனடியாக ஆராயுமாறும் அரச தலைவர் வலியுறுத்தினார்.



பெருந்தோட்டத் துறையில் தொழிற்சாலைகள் மற்றும் ஏனைய தேவைகளுக்காக எரிபொருளை வழங்கும் போது முறையான வேலைத்திட்டமொன்றின் அவசியம் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டது.



அமைச்சு அல்லது பிரதேச செயலாளரின் பரிந்துரையுடன் தொழிற்சாலை உரிமையாளர்களுக்கு நியமிக்கப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இருந்து எரிபொருளை விநியோகிப்பதற்கு முன்னுரிமை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டது.  



 



Gallery






வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb04

இலங்கை - இந்திய கடற்றொழிலாளர்களை  மோதவிட்டு ராஜபக்ச

Feb14

யாழ்.பருத்தித்துறையில் இருந்து கொழும்பு நோக்கிப் பயண

Apr02

  நாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள அவசரகாலச்

Sep22

வடக்கு மாகாணத்தில் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள

May20

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொ

Feb04

நாட்டில் கொரோனா தொற்று இன்னும் கட்டுப்பாட்டை மீறவில்

Sep19

செப்டம்பர் 2021 முதல் ஓகஸ்ட் 2022 வரை 53 நாடுகளில் உணவுப் பாத

Apr03

இலங்கை அண்மைக்காலமாக பெரும் பொருளாதார நெருக்கடிக்கு

May03

அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவின் ஆலோசகர்கள் எட்டாம் வக

Feb24

இலங்கையில் மீண்டும் சமையல் எரிவாயுக்கு தட்டுப்பாடு ஏ

Apr27

ஜனாதிபதி பதவி விலக வேண்டும் மற்றும் பிரதமர் தலைமையிலா

Mar23

LGBTQ (lesbian, gay, bisexual, transgender, and questioning ) சமூகத்திற்கு எதிராக  பயன்படு

Feb18

யாழில் உள்ள தனியார் நிதி நிறுவனமொன்றில் சிங்கள மொழியி

Jul11

யாழ்ப்பாணம் சாவகச்சேரி பிரதேச சபையின் உறுப்பினர் ஒரு

Jun08

வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய பயணிகளை அழைத்து