More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • இலங்கையின் மூத்த கல்வியியல் பேராசிரியர் சோ.சந்திரசேகரம் காலமானார்
இலங்கையின் மூத்த கல்வியியல் பேராசிரியர் சோ.சந்திரசேகரம் காலமானார்
Apr 04
இலங்கையின் மூத்த கல்வியியல் பேராசிரியர் சோ.சந்திரசேகரம் காலமானார்

  இலங்கையின் மூத்த கல்வியியல் பேராசிரியர் சோ.சந்திரசேகரம் தமது 78வது வயதில் காலமானதாக அவரின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.



நேற்று இரவு அவர் காலி - பலப்பிட்டிய என்ற இடத்தில் உள்ள விருந்தகம் ஒன்றில் தங்கியிருந்தபோதே மாரடைப்பால் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது. அவரின் உடலம் தற்போது பலப்பிட்டிய மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.



1944 டிசம்பர் மாதம் பிறந்த பேராசிரியர் சந்திரசேகரம், இலங்கையின் தமிழ் கல்வி வரலாற்றில் பாரிய பங்களிப்புக்களை செய்தவராவார். பதுளையை பிறப்பிடமாகக்கொண்ட பேராசிரியர் சோ. சந்திரசேகரம், கல்வியியல் துறையில் பேராதனை பல்கலைக்கழகம் மற்றும் ஹிரோசிமா பல்கலைக்கழக முதுமானி பட்டதாரியாவார்.



கொழும்பு பல்கலைக்கழக கல்வியியல் துறை முன்னாள் பீடாதிபதியாகவும், தேசிய கல்வி ஆணைக்குழுவின் முன்னாள் அங்கத்தவராகவும் மற்றும் கொழும்பு தமிழ் சங்கத்தின் முன்னாள் தலைவராகவும் பேராசிரியர் சோ.சந்திரசேகரம் பணியாற்றினார்.



பேராசிரியர் சோ.சந்திரசேகரம், தமிழ், ஆங்கில, சிங்கள மொழிகளில் புலமை கொண்டவர் என்பதுடன் முப்பதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.



மேலும் மலையகத்தில் பல்கலைக்கழகம் ஒன்று அமைக்கப்படவேண்டும் என்ற கொள்கையை முதன் முதலில் முன்மொழிந்தவர் பேராசிரியர் சோ.சந்திரசேகரம், ஆவார்.  






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jul16

ஐக்கிய மக்கள் சக்தியால் வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்ப

Feb02

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கான வெட்டுப் புள்

Jan28

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவசர சத்திரசிகிச்சைக்கு உட்பட

Sep22

தேசிய கடல்சார் வளங்களை பாதுகாக்கும் வாரம் எனும் தொனிப

Jul24

நாட்டில் நேற்று(23) வீதி விபத்துக்களால் 8 பேர் உயிரிழந்த

Oct25

2022ஆம் ஆண்டின் இறுதி சூரிய கிரகணத்தை இன்று (செவ்வாய்க்க

Oct03

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொட

Sep06

நாடு தற்போது எதிர்க் கொண்டுள்ள பிரச்சினைக்கு தீர்வு க

Mar21

மாகாண சபைத் தேர்தலுக்கு முகங்கொடுப்பதற்கு ஐக்கிய மக்

Sep26

சவுதி அரேபியாவின் தேசிய தின நிகழ்வுகளில் கலந்துகொண்ட

Feb05

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை ஆயிர

Jan26

மகளை துஷ்பிரயோகம் செய்து கருக்கலைப்பு செய்த தந்தை அட்

Mar19

11.6 மில்லியன் ரூபா நிதியில் புதிதாக கட்டப்பட்ட வட்டுக்

Dec30

முல்லைத்தீவு மாவட்டத்தின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்

Oct16

மட்டகளப்பில் நேற்று மக்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தை அட