More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • இளைஞர் சமூகத்திடம் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விசேட கோரிக்கை!
இளைஞர் சமூகத்திடம் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விசேட கோரிக்கை!
Apr 11
இளைஞர் சமூகத்திடம் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விசேட கோரிக்கை!

நாட்டில் தற்போதுள்ள அரசியல் அமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக இளைஞர்கள் முன்னெடுக்கும் போராட்டத்திற்கு ஆதரவு வழங்குமாறு இலங்கை இளைஞர் சமூகத்திடம் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விசேட கோரிக்கை விடுத்துள்ளார்.



ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்பாட்டிலுள்ள இளைஞர்கள் குழுவுடன் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.



நாட்டில் உள்ள இளைஞர்களும் சமூக ஊடக ஆர்வலர்களும் தற்போதுள்ள அரசியல் அமைப்பை மாற்றும் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர் என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என தெரிவித்த முன்னாள் பிரதமர், இது அரசியல் அல்லது வேறு சக்திகளின் கீழ் ஆரம்பிக்கப்படவில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.



இந்த நிலையில் அரசியல்வாதிகள் தலையிட்டு போராட்டத்தை கெடுக்க வேண்டாம் என அவர் கூறியுள்ளார். இந்தக் கலந்துரையாடலின் போது, இளைஞர்களால் ஆரம்பிக்கப்பட்டுள்ள போராட்டத்தில் அரசியல் ரீதியில் கலந்து கொள்ளுமாறு ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து செயற்படும் இளைஞர்கள், முன்னாள் பிரதமர் ரணிலுக்கு அழுத்தம் பிரயோகித்துள்ளனர்.



இளைஞர் யுவதிகள் சுயாதீனமாக ஆரம்பித்துள்ள இந்த போராட்டத்தில் அரசியல்வாதிகள் தலையிட கூடாதென ரணில் குறிப்பிட்டுள்ளார். அதற்கு பதிலாக அரசியல் சிந்தனைகளை அகற்றி, நாட்டின் இளைஞர்களாக இணைந்து போராட்டத்தில் ஈடுபடுமாறு கட்சியுடன் இணைந்த அனைத்து இளைஞர் குழுக்களுக்கும் முன்னாள் பிரதமர் பணிப்புரை விடுத்துள்ளார்.



போராட்டத்தை வெற்றிப்பாதையில் கொண்டு செல்வதில் இளைஞர்கள் பொறுமையுடனும், அமைதியாகவும் இருக்க வேண்டும் எனவும் அகிம்சை வழியில் போராட வேண்டும் எனவும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.  






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar30

புதுச்சேரி கடலூர் சாலையில், நீதிமன்றம் எதிரே உள்ள AFT தி

Mar09

நீதிமன்றை அவமதித்த குற்றச்சாட்டில் 4 வருட கடூழிய சிறை

May23

வவுனியா புளியங்குளம் பகுதியில் காயமடைந்த நிலையில் 

Jan25

அபுதாபியில் இருந்து இலங்கையின் திருகோணமலைத் துறைமுக

Oct08

'குருந்தூர்மலை பிரச்சினை உள்ளிட்ட தமிழ் மக்களின் மு

Mar29

எரிபொருள் விலை சீர்திருத்தத்தை அடுத்து அகில இலங்கை மு

Feb01

குருந்தூர் மலை விவகாரம் தொடர்பில் தொல்பொருள் திணைக்க

Jan26

தோட்டத்தொழிலாளர்களின் குறைந்தபட்ச நாளாந்த சம்பளத்தை

May01

பொலன்னறுவை மாவட்டத்தின் எலஹர மற்றும் சருபிம ஆகிய கிரா

Apr01

பாடசாலை கிரிக்கட் போட்டியின் (Big Match) போது, ​​இடம்பெற்ற வா

Oct05

 

நொதோர்ன் தனியார் வைத்தியசாலை ஸ்தாபகர் எஸ்.பி.சா

Jan22

ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ரா ஜெனெகா தடுப்பூசியை இலங்கையில் அவ

Feb06

இன்று இரவிலிருந்து தற்போது நிலவும் வரட்சியான வானிலைய

May19

5 பேருடன் இந்திய விமானம் ஒன்று கட்டுநாயக்க விமான நிலைய

May26

தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளும் உரிமை நாட்டுமக்கள் அ