More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • உக்ரைன் இரும்பு ஆலையில், தமது குழந்தைகள் மழை நீரையே குடித்தனர்- தாய் ஒருவரின் அனுபவம்!
உக்ரைன் இரும்பு ஆலையில், தமது குழந்தைகள் மழை நீரையே குடித்தனர்- தாய் ஒருவரின் அனுபவம்!
May 03
உக்ரைன் இரும்பு ஆலையில், தமது குழந்தைகள் மழை நீரையே குடித்தனர்- தாய் ஒருவரின் அனுபவம்!

உக்ரைனின் மரியுபோலில் இரும்பு ஆலைக்குள் தஞ்சமடைந்திருந்தபோது தமது குழந்தைகள் மழை நீரையே குடித்ததாக தாய் ஒருவர் தெரிவித்துள்ளார்.



யூலியாவும் அவரது மூன்று மகள்களும் தாகமாக இருந்ததால் மழை பெய்த பின்னர் அதனை சேகரித்தே சில வாரங்களாக குடித்து வந்துள்ளனர்



தண்ணீர் மற்றும் உணவு மாத்திரமல்ல. கழிப்பறை, குளியலறை அல்லது மின்சாரம் எதுவும் அந்த தங்குமிடத்தில் இருக்கவில்லை.



 



இந்தநிலையில் ரஷ்யர்கள் இரும்பு ஆலை மீதான தாக்குதல் நிறுத்தப்பட்;டு அவர்கள் வெளியேறிய பின்னர் குறித்த தாயும் மூன்று பிள்ளைகளும் முகாம் ஒன்றில் தங்கியுள்ளனர்



 



ஒரு நாளைக்கு ஒரு முறை மூன்று குழந்தைகளுக்கும் ஒரு சிறிய கிண்ணத்தில் சூபபை மட்டுமே உணவாக வழங்கமுடிந்தது.



மூன்று குழந்தைகளுக்கும் ஒரு குவளை தண்ணீர் மாத்திரமே கிடைத்தது.



 



தன்னிடம் பணம் இருந்தது, ஆனால் எதையும் வாங்க முடியவில்லை, எங்கும் எதுவும் இல்லை, அனைத்தும் உடைக்கப்பட்டு அனைத்தும் கொள்ளையடிக்கப்பட்டு அழிக்கப்பட்டதாக அவள் கூறியுள்ளார்



கடந்த மார்ச் தொடக்கத்தில் இருந்து சுற்றி வளைக்கப்பட்ட துறைமுக நகரமான மரியுபோல், இப்போது பெரும்பாலும் ரஷ்யப் படைகளின் கட்டுப்பாட்டில் உள்ளது



 



இருப்பினும் பல நூறு உக்ரைனிய துருப்புக்கள் நகரின் தெற்கில் உள்ள அசோவ்ஸ்டல் என்ற இரும்பு தொழிற்சாலையில் உள்ளனர்.



ரஷ்யப் படைகள் பரந்து விரிந்த தொழில்துறை வளாகத்தை முற்றுகையிட்டு அதன் மீது வான்வழி குண்டுவீச்சைத் தொடர்கின்றன,



ஆனால் தொழிற்சாலைக்கு அடியில் உள்ள சுரங்கப்பாதை வலையமைப்பிலிருந்து உக்ரைனிய துருப்புக்களை வெளியேற்ற இதுவரை எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை.   



 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Sep08

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றி உள்ள நி

Sep12

மியான்மர் நாட்டில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற

May23

அமெரிக்காவில் 6 வயது சிறுவன் ஒருவரின் சடலம் பயணப்பெட்

Jul03

சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நா

May01

லண்டன் நாடாளுமன்றத்திற்கு முன்பாக “கோட்டாகோகம“ என

May04

போரின் பாதிப்பினால் உயிரிழப்புகள் ஏற்பட்டு வரும் நில

May27

உக்ரைனில் இதுவரை கடும் பின்னடைவை எதிர்கொண்டுள்ள ரஷ்ய

Mar29

வண்ணங்களின் திருவிழாவான ஹோலி பண்டிகை நேற்று நாடு முழு

Apr02

தைவானின் தாய்டங் நோக்கி சென்றுகொண்டிருந்த பயணகள் ரெய

Apr03

சீனாவின் பிறப்பு விகிதம் கடந்த 2022-ம் ஆண்டு ஆயிரம் பேருக

Mar07

உக்ரைனில் ரஷ்யத் துருப்புகள் கடும் சேதங்களை விளைவித்

Feb04

தெற்கு ஒக்ஸ்போர்ட்ஷையரில் ஆயிரக்கணக்கான புதிய வீடுக

Mar18

பிரான்சில் நேற்று 29,975 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ச

Mar05

உக்ரைனுடனான போர் காரணமாக ரஷ்யா மீது பல்வேறு மேற்கத்தி

Sep28

கடந்த ஆண்டு கொரோனா பரவலைத் தொடர்ந்து சீனாவில் இருந்து