More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • தென்னிலங்கையில் அரசியல் புரட்சி! ஏற்படவுள்ள மாற்றம்
தென்னிலங்கையில் அரசியல் புரட்சி! ஏற்படவுள்ள மாற்றம்
May 03
தென்னிலங்கையில் அரசியல் புரட்சி! ஏற்படவுள்ள மாற்றம்

இலங்கையில் நாளைய தினம் அரசாங்கத்தில் மாற்றம் ஏற்படும் என அரசியல் தரப்புத் தகவல்கள் கூறுகின்றன.



பிரதமர் பதவியில் இருந்து விலக மகிந்த ராஜபக்ச விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் நாடாளுமன்றத்தில் நாளைய தினம் விசேட உரை ஒன்றை நிகழ்த்தி அவர் தனது பதவி விலகலை அறிவிப்பார் எனவும் நேற்று செய்திகள் வெளியாகி இருந்தன.



 



இதனடிப்படையில், பிரதமர் பதவி விலகினால், அமைச்சரவையும் கலைந்து விடும். இதன் பின்னர் புதிய பிரதமரின் கீழ் புதிய அமைச்சரவை இந்த வாரத்திற்குள் பதவியேற்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.





 



அமைக்கப்படவுள்ள இடைக்கால அரசாங்கத்தில் அமைச்சரவையின் அமைச்சர்களாக 10 பேரை மாத்திரம் நியமிக்க இணக்கம் காணப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பிரதமர் மற்றும் அமைச்சரவையை விசேட சபையின் மூலம் தெரிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.



இதனிடையே தேசிய இணக்கப்பாட்டு அரசாங்கத்தை அமைப்பது தொடர்பான  பொதுஜன பெரமுன மற்றும் அரசாங்கத்தில் இருந்து விலகி சுயாதீனமாக இயங்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கிடையில் நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இணக்கம் காணப்பட்டுள்ளது.





 



இந்த பேச்சுவார்த்தை கோட்டாபய ராஜபக்ச தலைமையில், கொழும்பு கோட்டையில் உள்ள அரச தலைவர் மாளிகையில் நடைபெற்றது. எது எப்படி இருந்த போதிலும் புதிய பிரதமர் பொதுஜன பெரமுனவை சேர்ந்த ஒருவராக இருப்பார் என்றே பேசப்படுகிறது.



இதன்படி டளஸ் அழகப்பெரும பெரும்பாலும் பிரதமர் பதவிக்கு பரிந்துரைக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது. அரசாங்கத்தில் இருந்து விலகி சுயாதீனமாக இயங்கும்,  சுதந்திரக் கட்சி, விமல் வீரவன்ச தலைமையிலான அணியினர் மற்றும் அனுரபிரியதர்ஷன யாப்பா தலைமையிலான அணியினரும் டளஸ் அழகப்பெருமவை ஆதரிப்பதாக தகவல்கள் கூறுகின்றன.








வரவிருக்கும் நிகழ்வுகள்
May15

இந்தியாவில் இருந்து டீசல் ஏற்றிய கப்பல் இலங்கையை வந்த

Jun03

இலங்கை, இணக்கமான பிரிவினைக்கு இணங்கினால், இலங்கையின் 52

Feb02

இலங்கைக்கு சிமெந்து இறக்குமதி செய்து வந்த சுமார் 35 நிற

Apr30

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா அச்சுறுத்தலைக் கருத்திற

Jan26

.கம்பஹா மாவட்ட காணி பதிவாளர் அலுவலகத்தில் சேவையாற்றும

Apr11

வலி. வடக்கில் ஒன்றரை வருடங்களாக திருட்டில் ஈடுபட்டு வ

Feb19

கிளிநொச்சி நகரில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற வாக

Sep23

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள கல்லடி

Apr30

மக்கள் விடுதலை முன்னணியின்  தலைவரும் நாடாளுமன்ற உறு

Oct22

யாழ்.மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் 13

Dec12

தோட்ட நிர்வாகம் மற்றும் கம்பனிகளுக்கு எதிராகவும், தொழ

May02

 

பாரிய மருந்து தட்டுப்பாடு காரணமாக தனியார் வைத

Jun02