உக்ரைனின் மரியூபோலில் அமைந்துள்ள உருக்காலையில் தஞ்சம் புகுந்திருந்தவர்களில், பெண்கள் மற்றும் குழந்தைகள் சுமார் 156 பேர் மீட்கப்பட்ட நிலையில், அவர்களை ரஷ்யப் படைவீரர்கள் மோசமாக நடத்தி அவமானப்படுத்தியது குறித்த தகவல்கள் வெளியாகி கொந்தளிக்கச் செய்துள்ளன.
இரண்டு மாதங்களாக மரியூபோலிலுள்ள உருக்காலைக்குள் தஞ்சம் புகுந்திருந்த உக்ரைனியர்களில், பெண்கள் மற்றும் குழந்தைகள் என சுமார் 156 பேரை ஐக்கிய நாடுகள் அமைப்பும், சர்வதேச செஞ்சிலுவைச் சங்கமும் மீட்டன.
ஆனால், இவ்வளவு நாள் பட்ட அவமானம் போதாதென, செஞ்சிலுவைச் சங்கத்தின் பேருந்துகளில் ஏறுவதற்கு முன் தேவையே இல்லாமல், பெண்களை உள்ளாடைகள் வரை சோதித்து அவமானப்படுத்தியுள்ளார்கள் ஈன குணம் படைத்த ரஷ்யப்படையினர்.