More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • படையினரின் சுற்றிவளைப்பு! பிரதான போதைப்பொருள் முகவர்கள் கைது!...
படையினரின் சுற்றிவளைப்பு! பிரதான போதைப்பொருள் முகவர்கள் கைது!...
Oct 09
படையினரின் சுற்றிவளைப்பு! பிரதான போதைப்பொருள் முகவர்கள் கைது!...

போதைப்பொருளை கடத்தி சென்ற 3 சந்தேக நபர்களை கல்முனை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.



அம்பாறை - கல்முனை விசேட அதிரடிப்படை முகாமிற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல் ஒன்றினை அடுத்து வெள்ளிக்கிழமை (07.10.2022) அதிகாலை சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அம்பாறை - கல்முனை பிரதான வீதி மல்வத்தை பிள்ளையார் கோவில் அருகில் வைத்து குறித்த சந்தேக நபர்கள் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.



இவ்வாறு கைதான நபர்கள் அம்பாறை நகர் பகுதியை சேர்ந்த 33, 37, 38 வயது மதிக்கத்தக்கவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்துடன் சந்தேக நபர்கள் பயணம் செய்த கருப்பு நிற கொரோல்லா கார் மற்றும் ஹெரோயின் போதைப்பொருள் 06 கிராம் 840 மில்லிகிராம், தொகுதி பணம் என்பன விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.



கைது செய்யப்பட்டவர்கள் சான்று பொருட்களுடன் நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக சம்மாந்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.



இதேவேளை அம்பாறை மாவட்டம் கல்முனை விசேட அதிரடிப்படை முகாமிற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல் ஒன்றினை அடுத்து வெள்ளிக்கிழமை (7.10.2022) அதிகாலை மற்றுமொரு நபர் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.



கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்முனை மதிரஸா வீதியில் விசேட அதிரடிப்படையினரால் முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.



இவ்வாறு கைதான நபர் கல்முனைகுடி பகுதியை சேர்ந்த 34 வயது மதிக்கத்தக்கவர் என்பதுடன் சந்தேக நபர் வசம் இருந்து ஹெரோயின் போதைப்பொருள் 7 கிராம் 870 மில்லி கிராம் உள்ளிட்ட சந்தேக நபர் பயன்படுத்திய கைத்தொலைபேசி என்பன விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.



 



பிரதான முகவர்கள்



கைது செய்யப்பட்ட நபர், சான்று பொருட்களுடன் கல்முனை தலைமையக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.



இவ்வாறு கைது செய்யப்பட்ட இரு தரப்பினரும் குறித்த பிராந்தியத்தில் போதைப்பொருள் விற்பனையின் பிரதான முகவர்களாக செயற்பட்டு வந்துள்ளதாக விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.



 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb16

சிறிலங்கா இராணுவத்தை சேர்ந்த அனைவருக்கும் மற்றும் ஓய

Mar15

தாயார் உயிரிழந்த நிலையில், சவப்பெட்டி வாங்க பணம் தேடி

Jan26

நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹட்டன் – பொகவந்தலா

Oct13

வடக்கு கிழக்கு சிவில் சமூகத்தினரால் முன்னெடுக்கப்பட

May20

மகிந்த ராஜபக்ச தனது 2 பதவிக்காலம் முடிவடைந்ததும் ஓய்வ

Mar30

தைத்த ஆடைகளின் விலைகள் சுமார் 40 வீதத்தினால் உயர்வடைந்

Mar30

இலங்கையரான பேராசிரியர் நீலிகா மாலவிகே உள்ளிட்ட ஒக்ஸ்

Mar13

சப்ரகமுவ, மேல், தென், மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் ச

Jun18

மேல், மத்திய, சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் க

May20

இன்னும் ஓரிரு மாதங்களில் தற்போதைய பிரதமர் ரணில் விக்ர

Sep21

பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கையை மீட்பதற்கா

Apr19

அரசின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுக்கிடையிலான கூ

Jan20

கொரோனா தொற்று உறுதியான இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசே

May04

இலங்கையில் சில வர்த்தக வங்கிகளில் இன்றைய தினம் அமெரிக

May27

இலங்கையில் பாடசாலை மாணவர்களுக்கு மீண்டும் மதிய உணவை வ