More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • கடலில் குதித்து தப்பிய வாலிபரிடம் போலீசார் விசாரணை!...
கடலில் குதித்து தப்பிய வாலிபரிடம் போலீசார் விசாரணை!...
Oct 09
கடலில் குதித்து தப்பிய வாலிபரிடம் போலீசார் விசாரணை!...

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக அங்கு வசிக்கும் தமிழர்கள் இடம் பெயர்ந்து கடல் வழியாக தமிழகம் வருகின்றனர். இதுவரை 150-க்கும் மேற்பட்ட அகதிகள் தனுஷ்கோடிக்கு வந்துள்ளனர். அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.



இந்த நிலையில் நேற்று முன்தினம் தனுஷ்கோடி அருகே 5-வது மணல் திட்டு பகுதியில் 2 நாட்களாக தவித்து கொண்டிருந்த இலங்கை அகதிகள் 5 பேர் மீட்கப்பட்டனர். இதில் கணவன்-மனைவி, அவர்களின் 3 குழந்தைகள் மீட்கப்பட்டனர்.



அவர்கள் கூறும்போது, தங்களுடன் வந்த ஒரு வாலிபர் இலங்கை கடற்படையினர் துப்பாக்கி சூடு நடத்தியதால் கடலில் குதித்து விட்டதாக தெரிவித்தனர். அவர் என்ன ஆனார்? என்பது குறித்து கடலோர காவல்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். மேலும் கடலில் ரோந்து சென்று அவரை தேடினர்.



இந்த நிலையில் கடலில் குதித்து தப்பிய வாலிபர் நேற்று மண்டபம் அகதிகள் முகாமுக்கு வந்தார். அவரிடம் மண்டபம் கடலோர போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் யாசர் மவுலானா மற்றும் கடலோர காவல்படை போலீசார்,



மத்திய-மாநில உளவு பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். எனது பெயர் ஹசன்கான் (வயது 24). எனது பெற்றோர் மற்றும் உறவினர்கள் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள முகாமில் தங்கி உள்ளனர். நான் கடந்த 2020-ம் ஆண்டு இலங்கைக்கு சென்று அங்கு மீன்பிடி தொழில் செய்து வந்தேன்.



தற்போது அங்கு போதிய வருமானம் இல்லாததால் கடந்த 5-ந்தேதி இரவு மன்னார் தாழ்வாடி பகுதியில் இருந்து 5 பேருடன் தனுஷ்கோடிக்கு புறப்பட்ட ஒரு பிளாஸ்டி படகில் நானும் அனுமதி பெற்று அவர்களுடன் வந்தேன்.



6-ந்தேதி இலங்கை கடற்படை எங்களை பார்த்து விட்டனர். அவர்கள் துப்பாக்கியால் சுட்டதால் அச்சம் அடைந்த நான் 5-வது மணல் திட்டு பகுதியில் கடலில் குதித்து நீந்தி அன்று மாலை 6 மணிக்கு அரிச்சல்முனை பகுதியில் கரையேறினேன். பின்னர் திருப்புல்லாணி அருேக குத்துக்கல்வலசை பகுதியில் வசித்து வரும் எனது தாத்தா வீட்டுக்கு சென்று விட்டேன்.



என்னை போலீசார் தேடுவது பற்றி அறிந்ததும் மண்டபம் முகாமுக்கு நானே வந்து விட்டேன். இவ்வாறு அவர் கூறினார். அவர் கூறுவது உண்மையான தகவலா? என்று போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளதால் மண்டபம் அகதிகள் முாமில் வைத்து அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.





 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar16

இந்தியா-இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 5 ஆட்ட

Jun17

யூடியூப் சேனல்களை தொடங்கி அதன் மூலம் பிரபலமானவர் மதன்

Mar27

எதிர்வரும் சட்டமன்ற தேர்தல் அதிமுக வேட்பாளர்கள் மற்ற

Sep18

தமிழகத்தில் கவர்னராக இருந்த பன்வாரிலால் புரோகித் பஞ்

May28

கொரோனா தொற்று லேசாக இருப்பவர்கள் வீடுகளில் தனிமைப்பட

Mar11

அமெரிக்காவில் ஜோ பைடன் ஜனாதிபதியாக பதவி ஏற்ற பிறகு அவ

Mar28

முதல்-அமைச்சர்  மு.க.ஸ்டாலின் 4 நாள் அரசுப் பயணமாக

Mar04

ரஷ்யாவிடமிருந்து, 'எஸ் - 400' ஏவுகணை சாதனங்களை வாங்கும்

Sep29

சென்னை எழும்பூரில் உள்ள தமிழ்நாடு மருத்துவ சேவைக் கழக

Sep28

அதிமுக மாநிலங்களவை உறுப்பினர்களாக இருந்த கே.பி முனுசா

Apr07

கொரோனா வைரஸ் அதிவிரைவாக பரவி வருவதாக எச்சரித்துள்ள மத

Feb25

நாடு முழுவதும் கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில் த

Jul17

மத்திய பிரதேச மாநிலம் விதிஷா மாவட்டத்தில் உள்ள கஞ்ச்ப

Mar09

இந்தியாவில் 2020-ம் ஆண்டில் கொரோனா தொற்று பாதிப்பு தொடங

Apr03

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகிற 6-ந் தேதி நடக்கிறத