More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • அகதியாக தமிழகம் செல்லும் இலங்கை தமிழர்கள்!
அகதியாக தமிழகம் செல்லும் இலங்கை தமிழர்கள்!
Oct 17
அகதியாக தமிழகம் செல்லும் இலங்கை தமிழர்கள்!

தொடரும் பொருளாதார  நெருக்கடியால் மேலும் 6 இலங்கை தமிழர்கள் இன்று திங்கட்கிழமை (17) காலை தனுஷ்கோடி அடுத்த ஒன்றாம் மணல் திட்டில் சென்று இறங்கியுள்ளனர்.



இலங்கை  தமிழர்களை மணல் திட்டில் இருந்து பத்திரமாக மீட்ட இந்திய கடலோர காவல்படையினர் ராமேஸ்வரம் மரைன் காவல்துறையினரிடம்  ஒப்படைத்தனர்.



இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக அங்குள்ள மக்கள் உணவு பொருட்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.



இதனால் கடந்த மார்ச் மாதத்திலிருந்து இலங்கையில் இருந்து இலங்கை தமிழர்கள் தனுஷ்கோடி வழியாக தமிழகத்திற்குள் அகதிகளாக சென்ற வண்ணம் உள்ளனர்.



இந்நிலையில் மன்னார் மாவட்டம் பேசாலையை சேர்ந்த அந்தோணி மரிய கொரட்டி. புலக்ஷன், சசிக்குமார்,கணுவியா, சனுஜன், அந்தோணி பெர்ணான்டோ உள்ளிட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் யாழ்ப்பாணத்தில் இருந்து படகில் புறப்பட்டு இன்று (17) காலை தனுஷ்கோடி அருகே உள்ள முதல் மணல் திட்டிற்கு சென்றுள்ளனர்.



தகவலறிந்து மண்டபம் கடலோர காவல் படையினர் முதல் மணல் திட்டிலிருந்து  இலங்கைத்  தமிழர்களை ஹோவர்  கிராஃப்ட் படகு  மூலம் மீட்டு  தனுஷ்கோடி அரிச்சல்முனை கரைக்கு கொண்டு சென்று ராமேஸ்வரம் மரைன் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

விசாரணைக்கு பிறகு 6 பேரும் மண்டபம் அகதிகள் முகாமில் ஒப்படைக்கப்பட உள்ளனர்.



இதனால் பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் இருந்து அகதிகளாக தமிழகம் வந்தவர்களின் எண்ணிக்கை 181 ஆக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Aug16

இலங்கையில் இரவு நேரங்களில் களியாட்ட நிகழ்வுகளை நடத்த

Feb02

இலங்கையின் நாடாளுமன்றத்தில் கொரோனா தொற்றுடையவர்களின

Jul27

கிளிநொச்சி உணவகம் ஒன்றில் உணவு பொதியில் மின் கடத்திக்

May29

இலங்கைக்கு இன்றையதினம் (29-05-2022) டீசல் அடங்கிய கப்பல் ஒன்ற

Feb01

முல்லைத்தீவு களமுறிப்பு வனப்பகுதியில் யானை ஒன்றைக் க

Feb02

வவுனியாவில் இதுவரை 362 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காண

Oct13

விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய இராணுவ

Jan12

பொரளை – வெலிக்கட பகுதியிலுள்ள தேவாலயமொன்றிலிருந்து

Sep27

எமது அரசாங்கத்தில் பல சிறந்த வேலைத்திட்டங்கள் முன்னெ

Oct01

காந்தியின் அகிம்சைப்போராட்டத்தினையும் தியாகத்தினைய

Oct24

கஞ்சாவை சட்டப்பூர்வமாக்கும் அதிகாரிகளின் நடவடிக்கைய

Feb04

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் இறக்குமதிக்கு மாதாந்

Jan27

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ஜுன ரணதுங்க ஐக்கிய

Mar06

வீரகெட்டிய, அத்தனயால பிரதேசத்தில் வசிப்பவர்கள் பொலிஸ

Apr30

அரசாங்கத்தினை பதவி விலகக் கோரி காலி முகத்திடலில் தொடர