More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • இலங்கையின் கடனை மறுசீரமைக்க உதவும் அமெரிக்கா
இலங்கையின் கடனை மறுசீரமைக்க உதவும் அமெரிக்கா
Sep 07
இலங்கையின் கடனை மறுசீரமைக்க உதவும் அமெரிக்கா

இலங்கையின் கடனை மறுசீரமைப்பதில் கடன் வழங்கும் நாடாக அமெரிக்கா பங்கேற்கும் என அமெரிக்காவின் திறைசேரி செயலாளர் ஜெனட் யெலன் (Janet Yellen) தெரிவித்துள்ளார்.



இதற்காக அனைத்து கடன் வழங்குனர்களுடனான உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தைகள் மற்றும் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் சரியான நேரத்தில் பங்கேற்பது மற்றும் சமனான சுமை பகிர்வு ஆகியவற்றின் அவசியம் குறித்தும் அமெரிக்க திறைசேரி சுட்டிக்காட்டிள்ளது.



இலங்கையின் கடன் வழங்குனர்களிடையே உத்தியோகபூர்வ ஒருங்கிணைப்பை ஏற்படுத்தும் முகமாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களால் முன்வைக்கப்பட்டுள்ள முன்மொழிவை வரவேற்றுள்ள அமெரிக்க திறைசேரி, இது தொடர்பான ஈடுபாட்டை வலியுறுத்தியுள்ளது.



நிதி தொடர்பான உத்தரவாதங்களை விரைவுபடுத்துவது என்ற பொதுவான இலக்கிற்காக இலங்கையுடன் செயற்பட விருப்பம் தெரிவித்துள்ள அமெரிக்கா, இச்செயன்முறையில் பங்கெடுத்துள்ள பரிஸ் கிளப்பின் ஏனைய உறுப்பினர்களுடனும் அதே இலக்கிற்காக இணைந்து செயற்படத் தயாராக உள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளது.



இதுவேளை இலங்கை மக்களுக்கு உதவுவதற்காக அவர்களின் ஏனைய அரச முகவர் அமைப்புக்களான உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் தொடர்ந்து செயற்படுவதாகவும் அமெரிக்க திறைசேரி உறுதியளித்துள்ளது.



மேலும் அமெரிக்காவால் இலங்கை மக்களுக்கென வழங்கப்பட்ட பாடசாலை சிறுவர்களுக்கான போஷாக்கு, கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் தாய்மார்களுக்கான உணவு கூப்பன்கள், உணவு உற்பத்தியை ஊக்குவிப்பதற்காக சிறிய மற்றும் நடுத்தர விவசாயிகளுக்கு விநியோகிக்கப்பட்ட உரம் மற்றும் நிதியுதவி தொடர்பிலும் அமெரிக்கா நினைவுகூர்ந்துள்ளது.



அண்மையில் இடம்பெற்ற அதிகாரிகள் மட்ட பேச்சுவார்த்தையின் ஊடாக நீடிக்கப்பட்ட நிதி வசதி (EFF) மூலம் சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெறுவதற்கு இலங்கை அரசாங்கம் எடுத்துள்ள முடிவை அமெரிக்க திறைசேரி வரவேற்றுள்ளது.



அமெரிக்க திறைசேரி செயலாளர், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கு இது குறித்து அறிவித்துள்ளார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Sep23

இந்தியாவும் இலங்கையும் இரு நாடுகளுக்கும் இடையே முன்ம

Feb18

இலங்கையில் மேலும் 13 கொரோனா மரணங்கள்- நாட்டில் பதிவாகும

Mar15

வரி அதிகரிப்பு உள்ளிட்ட அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக

May04

  படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர் டி.சிவராமின் நினைவ

Jul26

உபெக்ஷா சுவர்ணமாலி.

இலங்கையின் பிரபல நடிகைய

Feb11

அரச தாதியர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் காரணமா

Oct24

ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் 08 தமிழ் கைதிகள் இன்

Mar18

முல்லைத்தீவு மாவட்டத்தின் தமிழரசு கட்சியின் மத்திய ச

Oct15

அடக்குமுறையைக் கையாள்வதன் ஊடாக அரசியல் மற்றும் சமூக ஸ

Mar25

வவுனியா சுற்றுலாமைய விடயத்தில் நகரசபையின் குத்தகை ஒப

Mar27

இலங்கையில் இன்று (27) தங்கத்தின் விலை குறைந்துள்ளதாக கொ

Apr30

கருத்து தெரிவித்துக்கொண்டிருக்காமல், விவசாயிகளுக்கு

Sep23

100 நாட்கள் செயல்முனைவு மக்கள் குரல் மட்டக்களப்பு மாவட்

May01

அரசாங்கத்திற்கு எதிராக அலரி மாளிகைக்கு முன்பாக நடத்த

May03

தாய்லாந்தின் சியாம் எரிவாயு நிறுவனத்திடமிருந்து ஒரு