More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • தேசிய சபையை அமைப்பதற்கான தீர்மானத்தின் மீதான விவாதம் இன்று!
தேசிய சபையை அமைப்பதற்கான தீர்மானத்தின் மீதான விவாதம் இன்று!
Sep 20
தேசிய சபையை அமைப்பதற்கான தீர்மானத்தின் மீதான விவாதம் இன்று!

தேசிய சபையை அமைப்பதற்கான தீர்மானத்தின் மீதான விவாதம் இன்று நாடாளுமன்றத்தில் நடத்தப்படவுள்ளது.



ஆளும் கட்சியினால் இந்த யோசனை முன்வைக்கப்படவுள்ளது.



இன்று முற்பகல் 10.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை இந்த விவாதம் நடத்தப்பட்டதன் பின்னர் நாடாளுமன்றத்தில் அது அங்கீகரிக்கப்படவுள்ளது.



தேசிய சபை சபாநாயகர் தலைமையில் உள்ளது. இந்த சபையில்இ பிரதமர், அவைத் தலைவர், எதிர்க்கட்சித் தலைவர், ஆளும் கட்சியின் தலைமை அமைப்பாளர் மற்றும் நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் 35 உறுப்பினர்களும் உள்ளடங்குகின்றனர்.



குறுகிய நடுத்தர மற்றும் நீண்ட கால தேசிய கொள்கைகளை வகுத்தல் மற்றும் பொருளாதார ஸ்திரப்படுத்தல் தொடர்பான குறுகிய மற்றும் நடுத்தர கால குறைந்தபட்ச திட்டங்களுக்கான ஒப்பந்தத்தை உருவாக்குவது தொடர்பாக நாடாளுமன்றத்தில் பொதுவான முன்னுரிமைகளை அமைக்க தேசிய சபை முன்மொழிந்துள்ளது.



இதேவேளை நாடாளுமன்றில் பொதுமக்கள் பார்வையாளர் கூடம் இன்று முதல் திறக்கப்படவுள்ளதாக படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.



முதற்கட்ட நடவடிக்கையாக நாடாளுமன்ற கூட்டங்கள் இல்லாத நாட்களில் பாடசாலை மாணவர்கள் உட்பட நாடாளுமன்றத்திற்கு வருகை தருமாறு கோரும் தரப்பினருக்கு அனுமதி வழங்கப்படவுள்ளது.



இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் பாடசாலை மாணவர்கள் நாடாளுமன்றக் கட்டிடத்தொகுதிக்கு வருகைதர முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



இதற்கமைய முற்பகல் 9.30 மணி முதல் பிற்பகல் 3 மணிவரை இவ்வாறு உட்செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என நாடாளுமன்ற படைக்கல சேவிதர் நரேந்திர பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar12

எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத

Sep30

” TikTok ” மற்றும் 'ஒன்லைன் கேம்' ஆகியவற்றுக்கு அடிம

Feb01

பலாங்கொடை வளவ ஆற்றில் மூழ்கி இறந்த மாணவி தொடர்பில் இன

Feb23

கடல் ஆய்வில் ஈடுபட்டு வரும் அமெரிக்க பிரஜையின் உடைமைக

Feb02

எதிர்காலத்தில் வெளிநாடுகளிலிருந்து பாதாள உலக நடவடிக

Apr01

மன்னார் மறை மாவட்டத்தின் ஓய்வுநிலை ஆயர் இராயப்பு யோசே

Aug14

நிவாரணம் அடிப்படையில் வழங்குவதற்கு சதொச நிறுவனத்துக

May20

வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவுக்கும் ஐரோப்பி

May12

காற்றை விதைப்பவர்கள் தவிர்க்க முடியாமல் சூறாவளியை அற

Sep27

ஈஸ்டர் தாக்குதலின் சூத்திரதாரியாகக் கருதப்படும் சஹர

May29

இலங்கை எதிர்கொண்டுள்ள நெருக்கடியான நேரத்தில் அந்நாட

Apr30

மக்கள் விடுதலை முன்னணியின்  தலைவரும் நாடாளுமன்ற உறு

Mar29

2022 ஆம் ஆண்டுக்கான இலங்கை- இந்திய சர்வதேச பரோ குத்துச்சண

Jan20

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஒரு மில்லியன் மக்களில்

Aug12

நாட்டில் உடனடியாக ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்ட