More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • மணல் திட்டில் உணவின்றி தவித்த குழந்தைகள் உள்ளிட்ட 12 இலங்கையர்கள் மீட்பு!
மணல் திட்டில் உணவின்றி தவித்த குழந்தைகள் உள்ளிட்ட 12 இலங்கையர்கள் மீட்பு!
Sep 20
மணல் திட்டில் உணவின்றி தவித்த குழந்தைகள் உள்ளிட்ட 12 இலங்கையர்கள் மீட்பு!

இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு படகு மூலம் அகதிகளாக சென்ற நிலையில் தனுஷ்கோடி அடுத்த இரண்டாம் மணல் திட்டில் உணவின்றி குழந்தைகளுடன் தஞ்சமடைந்த இலங்கை தமிழர்கள் 12 பேர் இன்று காலை இந்திய கடலோர காவல்படையினரால் மீட்கப்பட்டுள்ளனர்.



இவர்கள் அரிச்சல்முனை கடற்கரைக்கு அழைத்துவரப்பட்டு விசாரணைக்கு பின்னர் மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைத்தனர்.



இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார வீழ்ச்சி காரணமாக உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் கடும் விலை ஏற்றம் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு காரணமாக இலங்கை தமிழர்கள் தனுஷ்கோடி கடல் வழியாக தமிழகத்திற்குள் அகதிகளாக வந்த வண்ணம் உள்ளனர்.



தனுஷ்கோடி அடுத்துள்ள இரண்டாம் மணல் திட்டில் குழந்தைகளுடன் இலங்கை தமிழர்கள் உணவின்றி தவித்து வருவதாக மீனவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் இந்திய கடலோர காவல் படைக்கு சொந்தமான ஹோவர் கிராப்ட் ரோந்து கப்பலில் இந்திய கடலோர காவல்படை வீரர்கள் விரைந்து சென்று மணல் திட்டில் தஞ்சமடைந்திருந்த இலங்கை தமிழர்களை மீட்டு அரிச்சல்முனை அழைத்து வந்து ராமேஸ்வரம் மரைன் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.



தங்களை அழைத்து வந்த படகு தனுஸ்கோடி முதல் திட்டில் இறக்கிவிட்டு சென்றதாகவும் காலை முதல் உணவின்றி தவித்து வந்த நிலையில் அருகில் மீன் பிடித்து கொண்டிருந்த மீனவர்களிடம் காப்பாற்றுமாறு உதவி கோரிய நிலையில்; தங்களை இந்திய கடலோர காவல் படை வீரர்கள் பத்திரமாக மீட்டதாகவும் அகதிகள் தெரிவித்தனர்.



பாதுகாப்பு வட்டார அதிகாரிகள் நடத்திய விசாரணைக்கு பின்னர் இவர்கள் அனைவரும் மண்டபம் அகதிகள் முகாமில் தங்கவைக்கப்பட்டனர்.



இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த மார்ச் மாதம் 22 ஆம் திகதி முதல் இன்று வரை இலங்கையில் இருந்து 169 இலங்கை தமிழர்கள் அகதிகளாக தமிழகம் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jan19

 திடீரென மயக்கமடைந்ததன் காரணமாக, 12 மாணவர்கள் வட்டவளை

Jan27

நுவரெலியா- உடபுஸ்ஸலாவ,டெல்மார் கீழ் பிரிவில் ஏற்பட்ட

Mar17

இலங்கை தொடர்பான ஐக்கிய இராச்சியத்தின் பயண ஆலோசனையில்

May22

வெடிபொருட்கள் செயலிழப்பு உள்ளிட்ட காவல்துறை கடமைகளு

Mar17

36 ஆவது பொலிஸ் மா அதிபராக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிப

Apr03

எதிர்வரும் சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு அரச மற்ற

Oct04

லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை குறைக்கப்படவுள்ளதாக

Aug14

நிவாரணம் அடிப்படையில் வழங்குவதற்கு சதொச நிறுவனத்துக

Feb02

தற்போதைய கொரோனா பரவல் அதிகரிப்பானது நாட்டை முடக்க வேண

May15

விடுதலைபுலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்களால் த

Oct19

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக

Jan26

யாரும் உணராமல் நாடு வேகமாக இராணுவமயமாக்கலை நோக்கி செல

Jan11

நாவின்ன – மஹரகம பகுதியைச் சேர்ந்த 15 வயதான சிறுமியொரு

Mar15

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு ஆதரவாக சமூக ஊடக ஆர்வல

Feb13

பாடசாலை மாணவர்களுக்கு 10 வெளிநாட்டு மொழிகளை கற்பிப்பத