More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • சுத்தமான குடிநீரை பெற்றுக்கொள்ள முடியாத நிலை - வேலுகுமார்
சுத்தமான குடிநீரை பெற்றுக்கொள்ள முடியாத நிலை - வேலுகுமார்
Sep 20
சுத்தமான குடிநீரை பெற்றுக்கொள்ள முடியாத நிலை - வேலுகுமார்

பெருந்தோட்டப் பிரதேசங்களில் நீரேந்து பகுதியில் இருந்து நீர் சுரண்டப்பட்டு நகர்புறம் மற்றும் கிராமப்புறங்களுக்கு கொண்டு செல்லப்படுவதால் தோட்டப் பகுதி மக்களும் அங்குள்ள பாடசாலை மாணவர்களும் சுத்தமான குடிநீரை பெற்றுக்கொள்ள முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என எதிர்க்கட்சி உறுப்பினர் எம். வேலுகுமார் தெரிவித்தார்.



பாராளுமன்றத்தில் இன்று  வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின் போதே அவர் இதனை தெரிவித்தார்.



இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில்



இன்று பெருந்தோட்டப் பகுதியில் வாழும் தோட்டத் தொழிலாளர்களுக்கு கோதுமை மா மண்ணெண்ணெய்யை பெற்றுக்கொள்ள முடியாத நிலைமை காணப்படுகின்றது. தோட்டங்களில் இருந்து எல்லாவற்றையும் சுரண்டுவதே தொடர்ச்சியாக நடக்கின்றன. 



தோட்டப்புறங்களில் நீரேந்து பிரதேசங்களில் உள்ள நீரை அங்கு அமைக்கப்படும் வேலைத்திட்டங்கள் மூலம் நகரங்களுக்கும் கிராமங்களுக்கும் கொண்டு சென்றுஇ தோட்டத்தில் உள்ள நீரும் சுரண்டப்படுகின்றது. இதனால் அங்கு நீர்ப்பற்றாக்குறை பெருவாரியாக உள்ளது.



குறிப்பாக தோட்டப்புற பாடசாலைகளுக்குக்கூட சுத்தமான குடிநீரை பெற்றுக்கொள்ள முடியாத நிலைமையே அங்கு காணப்படுகின்றது. அதனால் இவ்வாறுள்ள தோட்டப் பாடசாலைகளுக்கு சுத்தமான நீரை விநியோகிக்கும் வேலைத்திட்டத்தை முன்னெடுப்பீர்களா என்றார். 



அதற்கு அமைச்சர் கெஹலிய ரம்புக்வல பதிலளிக்கையில்இ பாடசாலை மாணவர்களின் குடிநீர் பிரச்சினைக்கு தற்காலிகமாகவேனும் நீர் குழாய் ஒன்றை அமைக்க முடியுமா என பார்ப்போம். 



அத்துடன் இந்த வருடம் முடியாவிட்டாலும் அடுத்த வருட வரவு செலவு திட்டத்தில் தோட்டப் பாடசாலைகளுக்கு குடிநீர் விநியோகத்துக்கு பிரத்தியேகமாக நிதி ஒதுக்கி நடவடிக்கை எடுக்க முயற்சிப்போம் என்றார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Sep23

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ராஜபக்ஷக்களின் ஆதரவுடன் ஆ

Mar30

இலங்கையரான பேராசிரியர் நீலிகா மாலவிகே உள்ளிட்ட ஒக்ஸ்

Oct15

விடுதலைப் புலிகளை தான் அழித்ததாக சொல்வதில் எவ்வித உண்

Sep24

சீனாவில் இருந்து அத்தியாவசிய மருந்துகளுடனான விமானமொ

Mar30


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் ஏப்ரல்

Jul06

இன்று காலை 6 மணிமுதல் அமுலாகும் வகையில் மேலும் சில பிரத

Feb08

சுயாதீன மனித உரிமை தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழ

Mar06

நாடாளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ச மற்றும் உதய க

Feb01

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியாவிற

Oct13

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சோள விதைக

Mar08

“உங்களை சுட வந்ததாக தெரிவித்து பயங்கரவாத தடைச்சட்டத

Sep20

நாட்டில் உள்ள பெரும்பாலான குழந்தைகள் தற்போது கடுமையா

Jan21

நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் தற்போது நி

Feb11

பிரபல ஜோதிடர் ஒருவரின் மனைவி தனது இரண்டு பிள்ளைகளுடன்

Mar30

தைத்த ஆடைகளின் விலைகள் சுமார் 40 வீதத்தினால் உயர்வடைந்