More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • ஜனாதிபதி ரணில் ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸிற்கு பயணம்!
ஜனாதிபதி ரணில் ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸிற்கு பயணம்!
Sep 22
ஜனாதிபதி ரணில் ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸிற்கு பயணம்!

ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 26ஆம் திகதி ஜப்பான் செல்லவுள்ளார்.



ஜப்பானில் நீண்ட காலம் பிரதமராக இருந்த அபே,  ஜூலை 8 ஆம் திகதி தனது 67 வயதில் அரசியல் கட்சியின் பிரசாரக் கூட்டத்தில் சுட்டுக்கொல்லப்பட்டார்.



செப்டம்பர் 27ஆம் திகதி நடைபெறும் அபேயின் இறுதிச் சடங்கில் ஜப்பான் மற்றும் உலகம் முழுவதிலுமிருந்து நூற்றுக்கணக்கான பிரமுகர்கள் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



ஜப்பானுக்கான விஜயத்தின்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜப்பானிய பிரதமர் ஃபுமியோ கிஷிடா மற்றும் ஜப்பானிய அரசாங்கத்தின் உயர்மட்ட பிரதிநிதிகளை சந்திக்கவுள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.



ஜப்பானுக்கான விஜயத்தைத் தொடர்ந்து ஜனாதிபதி பிலிப்பைன்ஸுக்கும் பயணம் மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுவதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



செப்டம்பர் 29ஆம் திகதி பிலிப்பைன்ஸில் நடைபெறவுள்ள ஆசிய வளர்ச்சி வங்கி ஆளுநர்கள் கூட்டத்தில் அவர் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.



ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது விஜயத்தின் போது பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி பொங்போங் மார்கோஸை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.



ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸிற்கான தனது விஜயங்களை முடித்துக் கொண்ட ஜனாதிபதி எதிர்வரும் செப்டெம்பர் 30 ஆம் திகதி இலங்கை திரும்பவுள்ளார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb01

அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சிக்கு எதிராக சமூக வலைத்

Mar26

இலங்கை குறித்த தமது அறிக்கையை சர்வதேச நாணய நிதியம் (IMF)

Apr25

கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பா

Apr11

2022 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட

Apr07

கந்தளாய் - அக்போபுர பகுதியில் ரயில் தடம் புரண்டதில் 16 ப

Jan20

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஒரு மில்லியன் மக்களில்

Feb06

நாட்டில் எந்த தேர்தலை நடத்தினாலும் அரசாங்கம் படுதோல்

Oct04

தனிப்பட்ட துப்பாக்கிகளை வைத்திருப்பவர்கள் அல்லது தன

May23

கொவிட் தொற்று நிலைமை காரணமாக இம்முறை வீடுகளில் இருந்த

May01

பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையிலிருந்து வெளிநா

Oct05

முல்லைத்தீவில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளுக்கு

Sep23

விலங்குணவு உற்பத்திக்காக வருடாந்தம் 600000 மெறரிக்தொன் ச

Jul13

மன்னார் காவற்துறை பிரிவில் உள்ள சௌத்பார் கடற்கரை பகுத

Oct08

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு தீபாவளி முற்பணமாக 15 ஆ

Mar08

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு விதிக்கப்பட்