More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • யங்கரவாத தடைச்சட்டத்திற்கு எதிராக வடக்கு-தெற்கில் உள்ள மக்கள் ஒன்றிணைவது பாரிய வெற்றி: சுமந்திரன்!
யங்கரவாத தடைச்சட்டத்திற்கு எதிராக வடக்கு-தெற்கில் உள்ள மக்கள் ஒன்றிணைவது பாரிய வெற்றி: சுமந்திரன்!
Sep 23
யங்கரவாத தடைச்சட்டத்திற்கு எதிராக வடக்கு-தெற்கில் உள்ள மக்கள் ஒன்றிணைவது பாரிய வெற்றி: சுமந்திரன்!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ராஜபக்ஷக்களின் ஆதரவுடன் ஆட்சியை தக்கவைத்துக் கொள்வதற்கான தனது சகல முயற்சிகளிலும் தோல்வியடைந்து வருவதாகவும் இறுதியாக வடக்கில் உள்ள மக்கள் தெற்கில் உள்ள தமது சகோதரர்களுடன் கொடூரமான சட்டத்தை நீக்குவதற்கான பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.



காலிமுகத்திடலில் நேற்று முன்னெடுக்கப்பட்ட பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்திற்கு எதிராக கையொப்பமிடும் நிகழ்வில் கலந்துகொண்ட அவர், இது ஊழல் ஆட்சியாளர்களுக்கு எதிராக மக்கள் பெற்ற மகத்தான வெற்றி என தெரிவித்துள்ளார்.



கொடூரமான பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் 1979 இல் ஒரு தற்காலிக விதிகள் சட்டமாக அறிமுகப்படுத்தப்பட்டது என்றும் ஆனால் அது நான்கு தசாப்தங்களாக தொடர்ந்து நீடித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.



அரசாங்கத்தை விமர்சிப்பவர்களின் வாயை அடைக்க எப்போதும் பயன்படுத்தப்படும் இந்த மனிதாபிமானமற்ற சட்டத்திற்கு எதிராக மக்கள் திரள வேண்டிய நேரம் இது  என்றும் அவர் கூறியுள்ளார்.



இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி இளைஞர் முன்னணியுடன் இணைந்து நாடு தழுவிய ரீதியில் காங்கேசன்துறையில் ஆரம்பிக்கப்பட்ட அனைவருக்கும் நீதி வழங்கும் பிரசாரம்இ நேற்று கொழும்பை வந்தடைந்ததுடன் காலிமுகத்திடலில் பொதுமக்கள் மற்றும் ஆர்வமுள்ள தரப்பினரிடமிருந்து கையொப்பங்கள் சேகரிக்கப்பட்டன.



மேலும் தெற்கே ஹம்பாந்தோட்டை வரை செல்ல திட்டமிடப்பட்டுள்ள இந்த பிரசாரத்தில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான கையொப்பங்கள் சேகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அதில் இதுவரை சுமார் 500000 பேர் கையெழுத்திட்டுள்ளதாகவும் ஏற்பாட்டாளர் ஒருவர் தெரிவித்தார்.



எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் மற்றும் சிவில் சமூக ஆர்வலர்கள் பலரும் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar22

கொழும்பு பெண்கள் பாடசாலையில் கல்வி பயிலும் 17 வயது சிறு

Jun07

நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் விதி

Sep30

இந்தியாவின் தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்

Feb02

தற்போதைய கொரோனா பரவல் அதிகரிப்பானது நாட்டை முடக்க வேண

May19

கடந்த 24 மணித்தியாலங்களில், தனிமைப்படுத்தல் விதிகளை மீ

Jan28

இந்தியாவினால் அன்பளிப்பு செய்யப்பட்ட ஒக்ஸ்போர்ட் அஸ

Sep26

சில பிரதேசங்களை அதியுயர் பாதுகாப்பு வலயங்களாகப் பிரக

Oct17

வவுனியாவில் சமூர்த்தி உத்தியோகத்தர் மீதான தாக்குதலை

Dec17

கறிமிளகாய் மற்றும் பச்சை மிளகாய் தவிர்ந்த ஏனைய மரக்கற

Feb03

தற்போதைய பொருளாதார நிலைமை குறித்து ஆலோசனை கோரி இலங்கை

May21

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்கா

Jan28

தனிமைப்படுத்தல் தொடர்பான நடவடிக்கைகள் தொடர்ந்தும் ம

Jan27

இலங்கை மத்திய வங்கி கடந்த திங்கட்கிழமை 26 பில்லியன் ரூப

Jun23

பாரிய கொரோனா நோய்த் தொற்று நிலைமைக்கு மத்தியில் எரிபொ

May11

பாதுகாப்பு அதிகாரிகளிடம் இருந்து உறுதிப்படுத்தல் கி