நுவரெலியா - லபுக்கலை பகுதிக்கு மரக்கறி ஏற்றச் சென்ற லொறி இன்று காலை கொண்டக்கலை பகுதியில் பாரிய பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் 14 பேர் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் ஐவர் வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்தார் .
சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி சுமார் 70 அடி பள்ளத்தில் லொறி வீழ்ந்ததாகவும் இதனால் லொறியில் பின் பகுதியில் அமர்ந்து பயணித்தோர் தூக்கி வீசப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.