வவுனியா - குட்செட் வீதியில் நேற்று முன்தினம் சடலமாக மீட்கப்பட்டவர்களின் பிரேத பரிசோதனைகளின் முடிவுகள் வெளியாகி உள்ளன.
அதன் பிரகாரம் அவர்களது உடலில் நஞ்சருந்தியமைக்கான எந்தவித அறிகுறிகளும் தென்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
மரணத்திற்கான காரணம் கண்டறியப்படாத நிலையில் குருதி மற்றும் சிறிநீர் மாதிரிகள், இரைப்பையில் பெறப்பட்ட உணவுபதார்த்தம் போன்றன மேலதிக பரிசோதனைகளுக்காக அரசாங்க பகுப்பாய்வு திணைக்களத்திற்கு அனுப்பிவைக்கப்படவுள்ளது.
குறித்த சம்பவத்தில் குட்செட்வீதி உள்ளகவீதியை சேர்ந்த சேர்ந்த சிவபாதசுந்தரம் கௌசிகன் வயது 42, அவரது மனைவியான கௌ.வரதராயினி வயது 36, இரு பிள்ளைகளான மைத்ரா வயது 9, கேசரா வயது 3 ஆகியோரே இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.