More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • இணை அனுசரணையிலிருந்து இலங்கை விலகியமை குறித்து ஐரோப்பிய ஒன்றியம் கவலை!
இணை அனுசரணையிலிருந்து இலங்கை விலகியமை குறித்து ஐரோப்பிய ஒன்றியம் கவலை!
Jan 26
இணை அனுசரணையிலிருந்து இலங்கை விலகியமை குறித்து ஐரோப்பிய ஒன்றியம் கவலை!

ஐ.நா. மனித உரிமைகள் பேரவைத் தீர்மானம் 30/1 இன் இணை அனுசரணையிலிருந்து இலங்கை விலகியமை குறித்து ஐரோப்பிய ஒன்றியம் கவலை வெளியிட்டுள்ளது.



நேற்று (திங்கட்கிழமை) ஐரோப்பிய ஒன்றியமும் இலங்கையும் இணைந்து நடத்திய விசேட மாநாடு ஒன்றிலேயே இந்த விடயம் ஐரோப்பிய ஒன்றியத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.



ஐ.நா. மனித உரிமைகள் பேரவைத் தீர்மானம் 30/1 இன் இணை அனுசரணையிலிருந்து இலங்கை விலகியிருப்பது குறித்தும், அதனுடன் இணைந்த மற்றும் கட்டமைக்கப்பட்ட தீர்மானங்கள் குறித்தும் ஐரோப்பிய ஒன்றியம் வருத்தம் தெரிவித்துள்ளது.



மேலும் இந்த சந்திப்பின் போது மனித உரிமை மீறல்கள் எனக் கூறப்படும் விசாரணை ஆணைக்குழுவை நியமிப்பது குறித்து இலங்கை தூதுக்குழு ஐரோப்பிய ஒன்றியத்திற்கு அறிவித்துள்ளது.



சமீபத்திய ஆண்டுகளில் நிறுவப்பட்ட சுயாதீன ஆணைக்குழுக்களின் முக்கிய பங்கை அடிக்கோடிட்டுக் காட்டிய ஐரோப்பிய ஒன்றியம், சமூகங்களிடையே நல்லிணக்கம், நீதி, பொறுப்புக்கூறல் மற்றும் சகவாழ்வை வளர்ப்பதன் முக்கியத்துவதையும் எடுத்துரைத்துள்ளது.



இதற்கிடையில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தில் திருத்தம் செய்து சர்வதேச தரத்திற்கு ஏற்ப அதைக் கொண்டுவருவதற்கான இலங்கையின் தேவையை ஐரோப்பிய ஒன்றியம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.



பொருத்தமான திருத்தங்களைச் செய்யும் நோக்கில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் விதிகளை மறுபரிசீலனை செய்வதற்கான தனது நோக்கத்தை இலங்கை அரசாங்கம் இதன்போது எடுத்து கூறியுள்ளது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Apr08

நேற்று புதன்கிழமை இரவு கிடைத்த பி.சி.ஆர். பரிசோதனை அறிக

Feb11

இலங்கையில் தீவிரமடைந்துள்ள இராணுவத்தின் அழுத்தம் கா

Feb01

அரச ஊழியர்கள் மற்றும் அரச துறையில் ஓய்வு பெற்றவர்களுக

Jul25

நேற்றைய தினம் காவல்துறையினரால் முன்னெடுக்கப்பட்ட தி

May22

கொடிய போரில் கொல்லப்பட்ட தமிழ் மக்களை நினைவுகூரும் மு

Sep23

மட்டக்களப்பு காந்திபூங்கா அருகில் உள்ள படுகொலைசெய்ய

Mar23

கரிபீயனில் ஒரு சிறிய இரட்டை தீவு தேசமான செயிண்ட் கிட்

Apr09

தமிழகத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு நடந்த ஜல்லிக்கட்டு போரா

Apr01

நாட்டின் ஜனாதிபதி கோட்டாபய அவர்களது இல்லம் அமைந்துள்

Oct15

அடக்குமுறையைக் கையாள்வதன் ஊடாக அரசியல் மற்றும் சமூக ஸ

Sep19

ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை அமர்வில் கலந்து கொள்வதற்க

Mar22

நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள், எரிவாயு மற்றும் மின்ச

May12

இலங்கையில் இரவு வேளையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பத

Oct03

வரலாறு காணாத விலை உயர்வை அடைந்திருந்த தங்கத்தின் விலை

Apr03

புற்றுநோய் ஏற்படுத்தக்கூடிய தேங்காய் எண்ணெய் விவகார