More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • ஜனாதிபதி தலைமையில் சுதந்திர தின நிகழ்வுகள் ஆரம்பம்!
ஜனாதிபதி தலைமையில் சுதந்திர தின நிகழ்வுகள் ஆரம்பம்!
Feb 04
ஜனாதிபதி தலைமையில் சுதந்திர தின நிகழ்வுகள் ஆரம்பம்!

இலங்கையின் 73ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் சற்றுமுன்னர் கொழும்ப – 7 இல் அமைந்துள் சுதந்திர சதுக்கத்தில் ஆரம்பமாகியது.



‘சுபீட்சமான எதிர்காலம் – சௌபாக்கியமான தாய் நாடு’ என்ற தொனிப் பொருளில் இலங்கையின் 73ஆவது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது.



ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் பிரதான நிகழ்வு கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் தற்போது நடைபெற்று வருகின்றன.





இலங்கையின் 73ஆவது சுதந்திர தினம் இன்று



இலங்கையின் 73ஆவது சுதந்திர தினம் நாடளாவிய ரீதியில் இன்று (வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது.



சுதந்திர தினத்தின் பிரதான விழா இன்று கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இடம்பெறவுள்ளது.



ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ ஆகியோரின் தலைமையில் இந்த நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.



சுதந்திர தின கொண்டாடத்தின் மரியாதை அணி வகுப்பில் 3,271 இராணுவத்தினர், 808 கடற்படையினர், 997 வான்படையினர், 664 பொலிஸ் துறையினர் கலந்துகொள்கின்றனர்.



இது தவிர பொலிஸ் விசேட அதிரடிப் படையின் 432 பேரும் சிவில் பாதுகாப்பு பிரிவின் 558 பேரும் சுதந்திர நிகழ்வில் கலந்துகொள்கின்றனர்.



அத்துடன் இதன்போது இடம்பெறவுள்ள கலாசார அணிவகுப்பில் 340 இசை மற்றும் நடன கலைஞர்கள் கலந்துகொள்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



முப்படையினர், பொலிஸ்துறையினர் உள்ளிட்ட 13 பிரிவினர் இந்த நிகழ்வுகளில் இணைகின்றனர்.



அத்துடன் 11 பாடசாலைகளைச் சேர்ந்த 45 மாணவர்களின் பங்குபற்றுதலுடன் தேசிய கீதம் இசைக்கப்படவுள்ளது.



கொரோனா தொற்று காரணமாக இம்முறை சுதந்திர தின கொண்டாட்டங்கள் சுகாதார விதிமுறைகளுக்கமைய கொண்டாடப்படுகின்றன. மேலும் சுதந்திர தின நிகழ்வில் கலந்துகொள்வது மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.



அத்துடன் நிகழ்வில் கலந்துகொள்ளும் அனைவரும் சுகாதார அமைச்சினால் பரிந்துரைக்கப்பட்டுள்ள சுகாதார வழிமுறைகளுக்கு அமைய செயற்படுவதாகவும் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.



அத்தோடு இன்றைய நிகழ்வில் பங்குபற்றும் அனைவருக்கும் பி.சீ.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
May15

இலங்கையில் பால் மா பொதி ஒன்றின் விலை மீ்ண்டும் அதிகரி

Mar05

இலங்கை இளைஞர், யுவதிளுக்கு கனடா உட்பட பல வெளிநாடுகளில

Mar26

பிரதேச சபையில் வீதி தொழிலாளர்கள், சாரதிகள், காவலாளிகள

Jan26

ஓட்டுமொத்த தோட்டத்தொழிலாளர் சமூகத்தை இலக்காகக் கொண்

Mar18

முல்லைத்தீவு மாவட்டத்தின் தமிழரசு கட்சியின் மத்திய ச

Jul18

கோவிட் தொற்றின் டெல்டா மாறுபாடு கொழும்பு நகராட்சி மன்

May11

முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ, அவரது குடும்பத்தினர்

Mar02

ஹொரணை மாவட்ட வைத்தியசாலையில் நோயாளர்கள் மீது மின் விச

Mar12

இஸ்லாமிய பாட புத்தகங்களில் காணப்படும் அடிப்படைவாத வி

Jan20

விமான நிலையங்கள் நாளை (வியாழக்கிழமை) முதல் மீண்டும் சு

Aug13

கொரோனா தொற்றினால் இறக்கும் நபர்களின் உடல்களை தகனம் செ

Jan15

அமெரிக்கா, பிரித்தானியா, ஐரோப்பிய நாடுகள் மற்றும் இந்

Jul17

கிளிநொச்சி வட்டக்கச்சி கட்சன் வீதி நேற்று மாலை முதல் 14

Aug31

இலங்கையில் 103 வயது மூதாட்டி ஒருவருக்கும் கொரோனாத் தடுப

May10

கட்டவிழ்த்து விடப்பட்ட அழிவிற்கு ராஜபக்சர்களே முழுப