More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • துபாயில் தொலைபேசி வழியாக மருத்துவ ஆலோசனை பெறுவது அதிகரிப்பு
துபாயில் தொலைபேசி வழியாக மருத்துவ ஆலோசனை பெறுவது அதிகரிப்பு
Feb 07
துபாயில் தொலைபேசி வழியாக மருத்துவ ஆலோசனை பெறுவது அதிகரிப்பு



துபாய் சுகாதார ஆணையத்தின் ஆரம்ப சுகாதார நிலைய தலைமை செயல் அதிகாரி டாக்டர் மனால் தர்யம் கூறியதாவது



துபாயில் 2019-ம் ஆண்டு ஒவ்வொரு குடிமகனுக்கும் மருத்துவ உதவி கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தொலைபேசி வழியாக மருத்துவ ஆலோசனை வழங்கும் சேவை தொடங்கப்பட்டது.



இந்த சேவையானது 24 மணி நேரமும், வாரத்தின் 7 நாட்களும் நடந்து வருகிறது. இந்த சேவையை பயன்படுத்துபவர்களது எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக கொரோனா பாதிப்பின் காரணமாக இந்த சேவையை பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.



கடந்த ஆண்டு ஜனவரி முதல் இந்த ஆண்டு ஜனவரி மாதம் வரை தொலைபேசி வழியாக மருத்துவ ஆலோசனையை 83ஆயிரம் பேர் பெற்றுள்ளனர்.



இதில் கொரோனா பாதிப்புக்குள்ளான 7 ஆயிரத்து 251 பேர் மருத்துவ ஆலோசனைகளை பெற்றனர். மேலும் 13,437 பேர் கொரோனா தடுப்பூசி உள்ளிட்டவை தொடர்பான ஆலோசனைகளை பெற்றனர்.



தொடர்ந்து இந்த மருத்துவ ஆலோசனைகளை பெறுபவர்களது எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு இந்த ஆலோசனையை வழங்குவதற்காக 52 மருத்துவர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஆரம்ப கட்டத்தில் இந்த ஆலோசனையை 10 மருத்துவர்கள் மட்டுமே வழங்கினர்.



இந்த ஆலோசனைகளை வழங்குவதற்காக 6 மையங்கள் ஆரம்பத்தில் இருந்தது. தற்போது இது 16-ஆக அதிகரித்துள்ளது. மேலும் ஆலோசனை பெறுபவர்கள் சுகாதார ஆணையத்தின் செயலியை தரவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். இந்த செயலியின் மூலமாகவும் தொடர்ந்து சுகாதாரம் தொடர்பான ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகிறது.



தற்போது இந்த தொலைபேசி வழியான மருத்துவ ஆலோசனையில் குடும்ப நலம் மற்றும் கொரோனா குறித்த ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகிறது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb24

ரஷ்யா-உக்ரைன் இடையே வெடித்த போரில் இதுவரை உக்ரைனை சேர

Mar04

உக்ரைன் நகரங்களில் தொடர்ந்து வான் தாக்குதலை ரஷ்ய துரு

Feb13

உடலுறவு என்பது ஆண், பெண் என இருபாலருக்கும் பொதுவான ஒன்

Mar02

பிரான்ஸ் நாட்டின் அதிபராக 2007-ம் ஆண்டு முதல் 2012-ம் ஆண்டு வ

Mar03

இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்ட உருமாறிய கொரோனா, மற

Mar19

சீனாவில் சமீபகாலமாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகி

Jul13
Mar30

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் வழக்கு விசார

Mar25

ருமேனிய எல்லையில் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கை

May20

கடந்த சில தினங்களுக்கு முன் அல் ஜசீரா ( Al Jazeera) செய்தி நிறு

Jul08