More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையிலான குழு 2ம் நாளாக ஆலோசனை!
தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையிலான குழு 2ம் நாளாக ஆலோசனை!
Feb 11
தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையிலான குழு 2ம் நாளாக ஆலோசனை!

தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையிலான குழு 2ம் நாளாக ஆலோசனை நடத்துகிறது.



தமிழகத்தில் வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்னரே அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தில் களமிறங்கிய நிலையில், தமிழக தேர்தல் ஆணையமும் வாக்காளர் பட்டியல் தயாரிப்பு, வாக்குச் சாவடி, வாக்கு இயந்திரங்கள் உள்ளிட்ட அனைத்து பணிகளையும் முடுக்கிவிட்டது. சட்டமன்றத் தேர்தல் தேதி இந்த மாதம் அறிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது.



இது தொடர்பாக ஆலோசனை நடத்த இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையிலான 8 பேர் கொண்ட குழு, நேற்று சென்னை வந்தடைந்தது. அந்த குழு முதற்கட்டமாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் தேர்தலை எத்தனை கட்டமாக நடத்துவது? தேர்தல் தேதியை எப்போது அறிவிப்பது? தபால் வாக்கு முறை அமல்படுத்துவதா? என்பது குறித்து தீவிர ஆலோசனை நடத்தியது. அப்போது, தமிழ் புத்தாண்டுக்கு ஒரு வாரத்திற்கு முன்னரோ அல்லது பிறகோ தேர்தல் நடத்த வேண்டாம் என பாஜக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் ஒருமித்த கோரிக்கை முன்வைக்கப்பட்டது.



 சென்னை கிண்டியில் உள்ள தனியார் ஓட்டலில் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தேர்தல் ஏற்பாடுகள் குறித்து 2ம் நாளாக ஆலோசனை நடத்தி வருகிறார். வருமான வரித்துறை, ரிசர்வ் வங்கி அதிகாரிகள், கடலோர காவல் படை அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தி வருவதாக தெரிகிறது. ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பங்கேற்றுள்ளார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jun29

இமாசல பிரதேசத்தின் சிர்மார் மாவட்டத்தில் பேக் பசோக் க

Apr24

ஐரோப்பிய ஆணைய தலைவர் ஏப்ரல் 24 மற்றும் 25ம் தேதிகளில் இந்

Jun20

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து இன்று மத

Aug16

75-வது சுதந்திர தினத்தையொட்டி, தருமபுரி மாவட்டம் எர்பைய

Nov04

செங்கல்பட்டு மாவட்டம் பூஞ்சேரி பகுதியில் வாழும் நரிக

Jul08

இந்தியாவில் கடந்த ஜனவரி 16-ந்தேதி முதல் கொரோனாவுக்கு எத

Apr27

இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை கடந்த சில வாரங்க

Feb25

குஜராத் மாநகராட்சி தேர்தல் முடிவுகள் நேற்று முன்தினம

Sep15

தமிழ்நாட்டைச் சேர்ந்த நரிக்குறவர்இ குருவிக்காரர் உள

Jun23

சீனாவில் 2019-ம் ஆண்டு இறுதியில் தோன்றிய கொரோனா வைரஸ் தொட

Feb28

நாடு முழுவதும் கொரோனா பரவல் குறைந்து வந்த நிலையில் சி

Jul31

டெல்லி செங்கோட்டையில் ஆகஸ்ட் மாதம் 15-ம் தேதி பிரதமர் ந

May16

தலைநகர் டெல்லியில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்க

Mar13

பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளக் கட்டுமான பொருட்களை ஏற்

Mar27

காஷ்மீர் முன்னாள் முதல் மந்திரியும், மக்கள் ஜனநாயக கட