More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • பாட்டலி சம்பிக்க ரணவக்க வழக்கின் சாட்சி விசாரணை எதிர்வரும் 31 ஆம் திகதி!
பாட்டலி சம்பிக்க ரணவக்க வழக்கின் சாட்சி விசாரணை எதிர்வரும் 31 ஆம் திகதி!
Mar 08
பாட்டலி சம்பிக்க ரணவக்க வழக்கின் சாட்சி விசாரணை எதிர்வரும் 31 ஆம் திகதி!

பொய் சாட்சியத்தை உருவாக்கியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளுக்கு எதிராக சட்ட மா அதிபரால் தாக்கல் செய்யப்பட்டு வழக்கின் சாட்சி விசாரணை எதிர்வரும் 31 ஆம் திகதி நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.



கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நீதிபதி தமிம் தொடவத்த முன்னிலையில் இந்த வழக்கு இன்று (08) பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.



2016 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதி இரவு, இராஜகிரிய பகுதியில் சந்தீப் குணவர்தன என்ற இளைஞரை விபத்துக்குள்ளாக்கி, அது குறித்து காவல்துறையினருக்கு அறிவிக்காது தப்பிச் சென்றமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் சட்ட மா அதிபரால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.



எதிர்வரும் 31 ஆம் திகதி சாட்சியமளிக்க வருகை தருமாறு முறைப்பாட்டு தரப்பின் ஒன்று தொடக்கம் ஐந்தாம் இலக்க சாட்சியாளர்களுக்கு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளது.



வழக்கின் 20 ஆம் இலக்க சாட்சியாளராக பெயர் குறிப்பிடப்பட்டுள்ள, நிதி அமைச்சின் செயலாளரையும் மன்றில் ஆஜராகுமாறு அறிவித்தல் அனுப்புமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.



வழக்கு தொடர்பில் அடிப்படை ஆட்சேபனையை சமர்ப்பிக்க எதிர்பார்த்துள்ளதாக பிரதிவாதிகள் சார்பில் ஆஜராகிய சட்டத்தரணிகள் மன்றுக்கு அறிவித்துள்ளனர்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jul17

மட்டக்களப்பு வாழைச்சேனையில் இருந்து குருநாகலுக்கு க

Oct07

தனக்கும்இ சாணக்கியனது உயிருக்கும் அச்சுறுத்தல் ஏற்ப

Feb03

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் மரக் கறிகளின்

Aug21

எதிர்வரும் இரண்டு வாரங்களில் நாட்டில் கொவிட் தொற்றாள

Jan27

கொரோனா வைரஸ் மருந்தினை பயன்படுத்துமாறு எவரையும் கட்ட

Feb06

லங்கா IOC நிறுவனம் இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலைய

Oct31

நீதி அமைச்சினால் சமாதான நீதிவான்களாக நியமிக்கப்பட்ட 1

Sep26

நாளை புதன்கிழமையும் இரண்டு மணி நேரம் 20 நிமிடம் மின்வெட

Sep25

பொதுமக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் மாகாண சபைகளை முன்னெ

Mar08

 நாட்டில் தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடிக்கு அ

Sep19

யாழ்ப்பாணம் ஆணைக்கோட்டை பகுதியில் 08 லீட்டர் கசிப்பு &nbs

Jan25

இவ்வருடம் உள்நாட்டு பால் உற்பத்தி 70 % ஆக அதிகரிக்கப்பட

Feb21

இலங்கைக்கு தேவையான எரிபொருளை ஏற்றிய 5 கப்பல்கள் எதிர்

Aug21

ஊரடங்கு அமுல்படுத்தப்பட்ட நிலையில் வவுனியா நகரில் மு

Sep23

விலங்குணவு உற்பத்திக்காக வருடாந்தம் 600000 மெறரிக்தொன் ச