More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • ரசிகர்களை நம்பி 234 தொகுதிகளிலும் களமிறங்கும் அர்ஜூன் சம்பத்!
ரசிகர்களை நம்பி 234 தொகுதிகளிலும் களமிறங்கும் அர்ஜூன் சம்பத்!
Mar 05
ரசிகர்களை நம்பி 234 தொகுதிகளிலும் களமிறங்கும் அர்ஜூன் சம்பத்!

கட்சி தொடங்கலாமா? என்று கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பிருந்தே தமிழகத்தின் அரசியல் பிரமுகர்கள், மூத்த பத்திரிகையாளர்கள் பலரையும் அழைத்து கருத்து கேட்டு வந்தார் நடிகர் ரஜினிகாந்த். அப்போது ரஜினியை இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத்தும் சந்தித்தார். அன்றிலிருந்து ரஜினி அரசியலுக்கு வருவது உறுதி என்று தொடர்ந்து சொல்லிக்கொண்டே வந்தவர் அர்ஜூன் சம்பத்.



அதே மாதிரி ரஜினி ஆன்மீக அரசியல் என்று அறிவித்ததும், அதுபற்றிய விமர்சனங்களுக்கும், குழப்பங்களுக்கும் ரஜினியின் பி.ஆர்.ஓ. மாதிரி இருந்து தொடர்ந்து விளக்கம் கொடுத்துக்கொண்டே வந்தார் அர்ஜூன் சம்பத்.



ரஜினி கட்சி தொடங்கியதும் அனைத்துக்கட்சி கூடாரங்களும் காலியாகிவிடும் என்று சொல்லி வந்தவர், கட்சி தொடங்குவதற்கான வேலைகளில் ரஜினி தீவிரம் காட்டியதும், 234 தொகுதிகளிலும் ரஜினிக்கு ஆதரவு என்று தெரிவித்தார் அர்ஜூன் சம்பத். கட்சி தொடங்கவில்லை என்று ரஜினி அறிவித்ததும், ரஜினியின் முடிவை வரவேற்கிறேன் என்றும் தெரிவித்தார் அர்ஜூன் சம்பத்.



இந்நிலையில், எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனது கட்சி தனித்து போட்டியிடுகிறது என்று தெரிவித்துள்ளார்.

ரஜினி சொன்ன ஆன்மீக ஆரசியலையே முன்னெடுத்து செல்கிறார். இந்துக்களின் குரல் சட்டமன்றத்தில் ஒலிக்க வேண்டும் என்றுதான் போட்டியிடுவதாக தெரிவித்துள்ளார். இதுவரைக்கும் 180 தொகுதிக்கு விருப்ப மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர் என்றும், வரும் 10-ம் தேதிக்குள் விருப்ப மனுக்கள் பெறப்பட்டு, நேர்காணலும் நடத்தப்பட்டு, 11ம் தேதி அன்று 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.



அதிமுக – பாஜக கூட்டணியில் இடம்பெறவும் கேட்டு வருகிறோம் . அந்த முயற்சியும் நடந்து வருகிறது என்று தெரிவித்துள்ளார் அர்ஜூன் சம்பத்.



தான் கட்சி தொடங்கவில்லை என்றதும், தனது ரசிகர்கள் எந்த கட்சியில் வேண்டுமானாலும் சேர்ந்துகொள்ளலாம் என்று ரஜினி சொல்லி இருப்பதால், அவர்களை பயன்படுத்திக்கொள்ளலாம் என்று அர்ஜூன் சம்பத் நினைப்பதாகவும், அவர்களின் ஆதரவும் இருக்கிறது. அதானால்தான் 234 தொகுதிகளிலும் தனித்து களம் காண்கிறார் என்றும் கூறுகிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.



 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jul29

ராகேஷ் அஸ்தனாவை டெல்லி காவல் துறை ஆணையராக மோடி அரசு நி

Jul11

இமாச்சல பிரதேசத்தில் சுற்றுலா தலங்களில் மாஸ்க் அணியா

Aug18

கேரள சுகாதாரத் துறை வெளியிட்ட செய்தியில், கடந்த 24 மணி ந

Feb26

காஷ்மீரில் எல்.ஓ.சி. என்னும் எல்லை கட்டுப்பாட்டு கோடு ப

Feb24

மும்பையில் இளம்பெண் கொலை வழக்கில் மகனை தந்தையே காட

Oct22

காலாவதியான 100 மில்லியன் கொவிட்-19 தடுப்பூசி டோஸ்கள் அழிக

Aug25

தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்தவ

Mar13

உக்ரைன் ராணுவத்தில் சேர்ந்த தமிழகத்தின் கோயம்புத்தூ

Sep09

ஆந்திரா மாநிலத்தில் உள்ள கிரியா பல்கலைக்கழகத்தில் மா

Jan30

இலங்கைக்கு அனைத்துச் சந்தர்ப்பங்களிலும் ஒத்துழைப்பு

Apr03

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில

Jul20

மக்கள் அங்கீகாரம் இல்லாத மனைகளை வாங்க வேண்டாம் என்று &n

May22

இந்தியாவினால் நன்கொடையாக வழங்கப்படும் மனிதாபிமான உத

May13

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம், ஊா்க்காட்டில் இரு பி

Nov08

மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில