More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • 2022இல் இலங்கைக்கு எதிராக சர்வதேச விசாரணை ஆரம்பம் - தயான் ஜயதிலக
2022இல் இலங்கைக்கு எதிராக சர்வதேச விசாரணை ஆரம்பம் - தயான் ஜயதிலக
Mar 27
2022இல் இலங்கைக்கு எதிராக சர்வதேச விசாரணை ஆரம்பம் - தயான் ஜயதிலக

வெளிநாட்டு கண்காணிப்பாளர்களின் பங்குபற்றலுடன் விசேட நீதிமன்றத்தை நிறுவி உள்ளக விசாரணையை இலங்கை முன்னெடுக்காவிட்டால் சர்வதேச பொறிமுறை செயற்படத் தொடங்கிவிடும். அதனைத் தடுத்து நிறுத்த முடியாது.



என்று ஐ.நாவுக்கான இலங்கையின் முன்னாள் நிரந்தர வதிவிடப் பிரதிநிதியும் சிரேஷ்ட இராஜதந்திரியுமான கலாநிதி தயான் ஜயதிலக தெரிவித்தார்.



ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கை விவகாரம் தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், அடுத்துவரும் அமர்வுகளில் என்ன நடக்கும் என எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு  கூறினார்.



இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-



இலங்கை விவகாரம் தொடர்பில் 6 மாதங்களுக்கு ஒரு தடவை மீளாய்வு செய்யப்படும். 2022 செப்டெம்பர் வரை காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தால் திரட்டப்படும் ஆவணங்கள் எல்லாம் 2022 செப்டெம்பருக்குப் பின்னர் உலக நாடுகளிலுள்ள நீதிமன்றங்களுக்கு அனுப்பப்படும். அவ்வாறு நடைபெற்றால் குறைந்த பட்சம் தீர்மானத்தை ஆதரித்த 22 நாடுகளிலாவது வழக்குத் தொடுக்கப்படும்.



இவ்வாறு வழக்குத் தொடுத்தாலும் எதுவும் செய்யமுடியாது என இலங்கை அரசு சவால் விடுக்கும் பட்சத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கையாக, முதலீடு, சுற்றுலாத்துறை, வர்த்தகம் உள்ளிட்ட விடயங்களில் இறுக்கமான போக்கு கடைபிடிக்கப்படும்.



எனினும், இலங்கைக்கு இன்னுமொரு வாய்ப்பு எஞ்சியுள்ளது. 2022 செப்டம்பர் மாதத்துக்கு முன்னர் சேர். டெஸ்மன் டி சில்வாவாலும் (பரணகம ஆணைக்குழு), அதற்கு முன்னர் நல்லிணக்க ஆணைக்குழுவாலும் முன்வைக்கப்பட்ட பரிந்துரைக்கமைய நம்பகமான விசாரணைப் பொறிமுறை உருவாக்கப்படவேண்டும்.



தங்களுக்கு விசுவாசமான நீதிபதிகளை நியமிக்காமல், உலகம் ஏற்றுக்கொள்கின்றவர்களை அல்லது வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கை நீதிபதிகளை உள்ளடக்கிய வகையில் விசேட நீதிமன்றமொன்றை நிறுவி, விசாரணைகளை முன்னெடுத்து தவறிழைத்தவர்களுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும். வெளிநாட்டு கண்காணிப்பாளர்களுக்கும் அழைக்கப்பட வேண்டும்.



அவ்வாறு செய்யாவிட்டால் சர்வதேச பொறிமுறை செயற்பட ஆரம்பித்துவிடும். இலங்கை விவகாரம் ஏற்கனவே சர்வதேச மயப்படுத்தப்பட்டிருந்தாலும் அதன் பொறிமுறை செயற்படவில்லை. இனி செயற்படத் தொடங்கினால் அதனை நிறுத்த முடியாது – என்றார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar09

நாட்டிற்குள் இந்திய அமைதிப்படை வருவதற்கு வாய்ப்பிரு

Jan27

நாட்டின் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்

Jan21

கொழும்பு துறைமுக நகரத்தில் புகைப்படம் மற்றும் காணொளி

May03

நுரைச்சோலையில் உள்ள மின் உற்பத்தி நிலையம் ஒன்றில் தொழ

Jan18

யாழ்ப்பாணத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மூடப்பட

Apr28

2021ஆம் ஆண்டிற்கான தேசிய வெசாக் பண்டிகையை கொண்டாடுவது த

Jan25

சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டு வரப் பட்ட 1,

Mar11

ஒரே நாளில் இலங்கையில் அடுத்தடுத்து பொருட்களின் விலைக

May21

இன்று இரவு 11 மணிமுதல் எதிர்வரும் 25ஆம் திகதி அதிகாலை 4 மண

Sep29

ஒவ்வொரு மாகாணத்திற்கும் வெவ்வேறு பிரச்சினைகள் இருப்

Sep24

சீனாவில் இருந்து அத்தியாவசிய மருந்துகளுடனான விமானமொ

Feb24

மட்டக்களப்பு வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் வாழும் மக

Oct13

விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய இராணுவ

Jun01

வவுனியா ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றுவோர் 6 பேர் உட்

Jul04

முல்லைத்தீவு இந்து தமிழ்க் கலவன் பாடசாலையில், நாளை மற