More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • கொரோனா பிரச்சினைக்கு பிறகு எனது முதலாவது வெளிநாட்டு பயணம் - பிரதமர் மோடி
கொரோனா பிரச்சினைக்கு பிறகு எனது முதலாவது வெளிநாட்டு பயணம் - பிரதமர் மோடி
Mar 26
கொரோனா பிரச்சினைக்கு பிறகு எனது முதலாவது வெளிநாட்டு பயணம் - பிரதமர் மோடி

கொரோனா பரவலுக்கு பிறகு முதல்முறையாக பிரதமர் மோடி இன்று வெளிநாட்டு பயணம் மேற்கொள்கிறார். 2 நாள் பயணமாக வங்காளதேசம் செல்கிறார்.



பிரதமர் மோடி 2 நாள் பயணமாக இன்று வங்காளதேசத்துக்கு செல்கிறார். கொரோனா பரவத் தொடங்கிய பிறகு அவர் கடந்த ஓராண்டாக எந்த வெளிநாட்டுக்கும் செல்லவில்லை.



முதலாவது வெளிநாட்டு பயணமாக வங்காளதேசம் செல்கிறார். இதுகுறித்து மோடி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-



வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா அழைப்பின்பேரில், 26 மற்றும் 27-ந்தேதிகளில் வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்கிறேன். கொரோனா பிரச்சினைக்கு பிறகு எனது முதலாவது வெளிநாட்டு பயணம், நம்முடன் நட்பில் உள்ள அண்டை நாடாக இருப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.



வங்காளதேசத்தின் தேசிய தினம் மற்றும் அந்நாட்டின் தேசத்தந்தை ஷேக் முஜிபூர் ரகுமானின் நூற்றாண்டு விழாவுக்காக நான் செல்கிறேன்.



அங்கு முஜிபூர் ரகுமானின் சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்துவேன். 51 சக்தி பீடங்களில் ஒன்றான ஜஷோரிஷ்வரி காளி கோவிலுக்கு சென்று காளியை வழிபடுவேன். ஒரகண்டி என்ற இடத்தில் மடுவா சமூக பிரதிநிதிகளை சந்தித்து பேசுவேன்.



ஷேக் ஹசீனாவுடன் பேச்சுவார்த்தை



பிரதமர் ஷேக் ஹசீனாவுடன் கடந்த டிசம்பர் மாதம் காணொலி காட்சி மூலம் உரையாடினேன். தற்போது, அவரை நேரில் சந்தித்து விரிவான பேச்சுவார்த்தை நடத்த ஆவலாக இருக்கிறேன். அதிபர் அப்துல் ஹமீதுவையும் சந்திப்பேன்.



ஷேக் ஹசீனாவின் தலைமையில் வங்காளதேசம் அடைந்த பொருளாதார வளர்ச்சியை பாராட்டுவதுடன், இந்த சாதனைகளுக்கு இந்தியாவின் ஆதரவையும் தெரிவிப்பேன். மேலும், கொரோனாவுக்கு எதிரான அந்நாட்டின் போராட்டத்துக்கு இந்தியாவின் ஆதரவை தெரிவிப்பேன்.



இவ்வாறு மோடி கூறியுள்ளார்.



இந்த பயணத்தின்போது, இந்தியா-வங்காளதேசம் இடையே சில ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும், புதிய அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Apr01

நாம் தமிழர் முன்வைக்கும் மாற்றம் என்பது அதிமுகவை அகற்

Jul17

கோவையில் இருந்து திருப்பூருக்கு சென்ற அரசுப்பேருந்த

Jul17

கொரோனா இரண்டாவது அலையை சமாளிக்கும் வகையில் புதுச்சேர

Mar25

மக்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது, ராணுவ இணை மந

Jul21

இறைவனின் நேசத்துக்கு உரியவராக வர்ணிக்கப்பட்டவர் இப்

Jul14

பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கில் குற

Jun30

கர்நாடகத்தில் கொரோனா 2-வது அலை காரணமாக நடப்பு கல்வி ஆண்

Aug10

பெகாசஸ் விவகாரம், விவசாயிகள் போராட்டம், பெட்ரோல் விலை

Mar08

உக்ரைன் மீது ரஷ்யா கடந்த 24ஆம் தேதி தனது போரை தொடங்கி நட

Jan28

பிரான்ஸில் இருந்து மேலும் 3 ரஃபேல் போர் விமானங்கள் இந்

Dec27

நிலுவையிலுள்ள சான்றிதழ்களை தாமதமின்றி வழங்க வேண்டும

Jul17

தமிழ்நாடு பா.ஜ.க.மாநில துணைத் தலைவராக இருந்த அண்ணாமலைய

Jun22

தேர்தல் வியூகங்களை வகுப்பதில் வல்லுனராக கருதப்படுபவ

Jun30

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர்