More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • ஓட்டமாவடி பிரதேச சபையின் 36வது சபை அமர்வு இன்று நடைபெற்றது!
ஓட்டமாவடி பிரதேச சபையின் 36வது சபை அமர்வு இன்று நடைபெற்றது!
Mar 26
ஓட்டமாவடி பிரதேச சபையின் 36வது சபை அமர்வு இன்று நடைபெற்றது!

பிரதேச சபையில் வீதி தொழிலாளர்கள், சாரதிகள், காவலாளிகள், தற்காலிக அடிப்படையில் கடமையாற்றும் ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு கடந்த மாதம் முதல் வழங்கப்பட்டு வருவதாக தவிசாளர் ஏ.எம்.நௌபர் தெரிவித்தார்.



ஓட்டமாவடி பிரதேச சபையின் 36வது சபை அமர்வு பிரதேச சபை மண்டபத்தில் தவிசாளர் ஏ.எம்.நௌபர் தலைமையில் நடைபெற்றது.



ஓட்டமாவடி பிரதேச சபையில் வீதி தொழிலாளர்கள், சாரதிகள், காவலாளிகள் தற்காலிக அடிப்படையில் கடமையாற்றும் ஊழியர்கள் ஆகியோரது சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும் என்று சபையினால் பல முறை தீர்மானிக்கப்பட்ட போதிலும் சபையின் வருமான இழப்பு காரணமாக கடந்த காலங்களில் சம்பள அதிகரிப்பினை மேற்கொள்ள முடியாதிருந்தது.



இருந்த போதிலும் ஊழியர்களது தியாகம், தற்போதைய விலைவாசி அதிகரிப்பு என்பன கருத்திற்கொள்ளப்பட்டு மேற்படி தற்காலிக ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு கடந்த மாதம் முதல் வழங்கப்பட்டு வருவதாக தவிசாளர் ஏ.எம்.நௌபர் தெரிவித்தார்.



ஓட்டமாவடி பிரதேச சபைக்கு சுப்றா தரமுள்ள செயலாளர் நியமிக்கப்பட வேண்டுமென பிரதேச சபை உறுப்பினர் ஏ.ஜி.அஸீஸல் றஹீமால் முன்வைக்கப்பட்ட பிரேரணை பதினைந்து மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.



பிரதேச சபை உறுப்பினர் ஏ.ஜி.அஸீஸல் றஹீமால் குறித்த பிரேரணை முன்மொழியப்பட்டதுடன், பிரதேச சபை உறுப்பினர் எம்.ஐ.ஹாமித் மௌலவி வழிமொழிந்து சபையின் பதினைந்து உறுப்பினர்களின் பெரும் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.



இதன்போது பிரதேச சபை செயலாளர் பிரதேச அபிவிருத்திக் குழு கூட்டத்தில் ஒட்டுமொத்த சமூகத்தின் அர்ப்பணிப்பை ஒரு அரசியல்வாதியின் புகழ்பாடி கொவிட் 19 ஜனாஸா நல்லடக்கம் தொடர்பில் பொய்யான தகவல்களை நாட்டுக்கு வழங்கி ஓட்டமாவடி பிரதேச சபைக்கு மிகப்பெரும் அவப்பெயர் ஏற்படுத்தப்பட்டுள்ளமை தொடர்பில் காரசாரமான விவாதங்கள் இடம்பெற்றது.



சபை அமர்வின் போது பிரதேச சபை உரையாற்றுவதற்கு வழங்கப்படும் ஐந்து நிமிடம் மக்கள் பிரச்சனைகள் தொடர்பில் உரையாடுவதற்கு நேரம் போதாமை காரணமாக நேரத்தினை அதிகரித்து தருமாறு சபை உறுப்பினர்களால் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jan23

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங

May29

தற்போதைய பொருளாதார நெருக்கடி மற்றும் சமூக ஸ்திரமின்ம

May25

மேல்மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி காவல்துறை

Jul08

பசில் ராஜபக்ஷ இன்று நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி ஏற்

Jul09

2019 ஆம் ஆண்டு ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்ட வன்முறை மற்று

Jan26

தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டது

May14

கோவிட் -19 வைரஸ் தொற்று காரணமாக மேலும் 24 பேர் உயிரிழந்து

Feb02

களனி பல்கலைக்கழக மாணவர்கள் தாக்கப்பட்ட விடயத்தில் எழ

Mar08

இலங்கையில் கோழி முட்டைக்கான சில்லறை விலை 28 ரூபாவாக அதி

Feb03

கட்டுநாயக்க முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்தில் உள்ள தொழ

Apr19

வவுனியா- மகாரம்பைக்குளத்திலுள்ள வீடொன்றிற்குள் வாள்

Feb02

இலங்கையில் நேற்றைய தினம் கொரோனா தொற்றாளர் களாக அடையாள

Jul09

களுத்துறை மாவட்டத்தின் அகலவத்தை காவல்துறை பிரிவுக்க

Sep07

இலங்கையில் கடந்த மாதங்களாக நிலவிய அசாதாரண நிலை காரணமா

Mar11

பணிப்பெண்களாக வௌிநாடுகளுக்கு செல்லும் 45 வயதிற்கும் க