More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • இலங்கையில் வழங்கப்படும் மிக உயர்ந்த ஜனாதிபதி விருது!
 இலங்கையில் வழங்கப்படும் மிக உயர்ந்த ஜனாதிபதி விருது!
Apr 10
இலங்கையில் வழங்கப்படும் மிக உயர்ந்த ஜனாதிபதி விருது!

விஞ்ஞான ஆய்வுக்கான மிக உயர்ந்த ஜனாதிபதி விருது தமிழரான கலாநிதி நவரட்ணராஜாவிற்கு வழங்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மற்றும் ஆய்வாளர்களுக்கு இலங்கையில் வழங்கப்படும் மிக உயர்ந்த விருதாக இந்த விருது கருதப்படுகின்றது.



சஞ்சிகையொன்றில் வெளியிடப்பட்ட ஆய்வு கட்டுரை ஒன்றுக்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. இலங்கை தேசிய ஆராய்ச்சி சபையினால் நேற்றைய தினம் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. மெய்நிகர் தொழிநுட்பத்தின் ஊடாக இந்த விருது வழங்கும் நிகழ்வு நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.



கடினமான பாதையை கடந்து வந்து இவ்வாறு விருது வென்றெடுப்பது அளவில்லா மகிழ்ச்சி அளிப்பதாகவும், இந்த தருணத்தில் தனது ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி பாராட்டுவதாகவும் கலாநிதி நவரட்ணராஜா தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.



இலங்கை திறந்த பல்கலைக்கழகம், தென்கிழக்கு பல்கலைக்கழகம் என்பனவற்றில் விரிவுரையாளராக கடமையாற்றியுள்ள கலாநிதி நவரட்ணராஜா தற்பொழுது பேராதனை பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட விரிவுரையாளராக கடமையாற்றி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.



கலாநிதி நவரட்ணராஜா டிக்கோயா போர்டைஸ் தமிழ் வித்தியாலயம், புளியாவத்தை தமிழ் மகா வித்தியாலயம் மற்றும் ஹட்டன் ஹைலன்ட்ஸ் மத்திய கல்லூரி என்பனவற்றின் பழைய மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.



 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Nov23

யுத்தத்தினால் உயிர்நீத்தவர்களை நினைவுக்கூறும் உரிமை

Mar10

வெள்ளைப் பூரான் கடிப்பதால் ஏற்படும் விஷம் உயிர் ஆபத்த

Jan30

இந்திய அரசின் வெக்சின்மைத்ரி திட்டத்தின் கீழ் இலங்கை

May03

நடைபெற்றுக்கொண்டிருக்கும் அரசாங்கத்திற்கு எதிரான தொ

Mar13

வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்னால் தொடர் போரா

Jan27

லங்கையில் புதிய வகை கொரோனா வைரஸ் இனங்காணப்பட்டுள்ளதா

Aug30

ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் குருநாகல் மாவட்ட நாடாளு

Jun02

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மகிந்த கஹந்தகமகே குற்றப

Feb07

மருந்துகளை இறக்குமதி செய்வதற்கான கடன் கடிதத்தைத் திற

Mar29

இன்று (29) நள்ளிரவு முதல் எரிபொருள் விலை குறைக்கப்படுவத

Jul14

ஆசிரியர்களை தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு செ

Feb04

எதிரிப் படைகளைத் தோற்கடிப்பது போன்றே, கொரோனா – 19 தொற்

Sep15

 

காலி முகத்திடல் போராட்டக்காரர்களால் காலி முகத

Oct15

களனி பட்டிவெல பிரதேசத்தின் ஊடாக பயணிக்கும் சாரதிகளுக

Sep14

நாடளாவிய ரீதியில் தடுப்பூசி செலுத்தும் வேலைத்திட்டம