More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • ராணுவ ஆட்சி அமல்படுத்தப்பட்ட பின் முதல்முறையாக ஆங் சான் சூகி கோர்ட்டில் ஆஜர்!
ராணுவ ஆட்சி அமல்படுத்தப்பட்ட பின் முதல்முறையாக ஆங் சான் சூகி கோர்ட்டில் ஆஜர்!
May 25
ராணுவ ஆட்சி அமல்படுத்தப்பட்ட பின் முதல்முறையாக ஆங் சான் சூகி கோர்ட்டில் ஆஜர்!

மியான்மர் நாட்டில் கடந்த பிப்ரவரி மாதம் 1-ம் தேதி முதல் ராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் ஆங் சான் சூகி உள்ளிட்ட பல்வேறு தலைவர்களை ராணுவம் கைது செய்து தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. அவர் வீட்டுக்காவலில் உள்ளார்.



ராணுவ ஆட்சிக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்கள் மீது மியான்மர் ராணுவத்தினர் கடுமையான ஒடுக்குமுறைகளைப் பின்பற்றி வருகின்றனர். மியான்மரில் ராணுவம் நடத்தி வரும் தாக்குதலில் இதுவரை பொதுமக்கள் 800- க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.



இதற்கிடையே, ராணுவ கட்டுப்பாட்டில் வீட்டுக்காவலில் உள்ள ஆங் சான் சூகி விரைவில் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுவார் என அந்நாட்டு ராணுவ தளபதி மின் அங் ஹலிங் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தார்.



இந்நிலையில், 16 வாரங்கள் வீட்டுச்சிறையில் உள்ள ஆங் சான் சூகி முதல்முறையாக பொதுவெளியில் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டார்.



தேசிய பாதுகாப்பு சட்டத்தை மீறியதாக கடந்த பிப்ரவரி 1-ம் தேதி முதல் சூகி கைது செய்யப்பட்டு வீட்டுக்காவலில் இருந்து வருகிறார். கைது செய்யப்பட்ட பின்னர் ஆங் சான் சூகியின் நிலை என்ன ஆனது என்று பல்வேறு கருத்துக்கள் நிலவி வந்தன.



ஆனால், கைது செய்யப்பட்ட பின் முதல்முறையாக கோர்ட் விசாரணைக்கு காணொலி காட்சி மூலம் ஆஜரான  ஆங் சான் சூகி, 'மக்களின் ஆதரவு உள்ளவரை தனது தேசிய லீக் ஜனநாயக கட்சியும் இருக்கும்’ என தெரிவித்தார். இந்த சம்பவம் மியான்மர் அரசியலில் பரபரப்பாகியுள்ளது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar13

 உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷியா தொடர்ந்து பல்வே

Mar09

உக்ரைன் மற்றும் ரஷ்யாவிற்கு இடையிலான போர் தொடர்ந்து 13

Mar17

உக்ரேன் விவகாரத்தில் ரஷ்யாவின் நகர்வுகள் திட்டமிட்ட

Jun17

சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு போட்டியாக, சீனா தனியாக

Aug09

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் போகோஹரம் பயங்கர

Apr30

அரசமைப்புச் சட்டத்தின் 161 ஆவது உறுப்பினைப் பொறுத்தவரை

Feb24

ரஷ்யாவில் உள்ள அனைத்து உக்ரைனியர்களையும் அங்கிருந்த

Mar20

துபாய் நகரில் சம்மா மற்றும் மரியம் என்ற சகோதரிகள் வசி

Mar05

 ரஷியாவின் தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கும் ஜபோரி ஜி

Mar27

பாகிஸ்தானில் இருந்து வங்காளதேசம், 1971-ம் ஆண்டில் பிரிந்

May09

இளவயது உக்ரேனிய சிறுமி ஒருவர், ரஷ்ய துருப்புகள் கால்க

May23

பிரித்தானியா தனக்கு சொந்தமானதென கூறும் சாகோஸ் தீவில்

Apr01

ஓமன் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்

Jan26

அவுஸ்ரேலியாவில் அவசர பயன்பாட்டுக்காக பைசர் கொரோனா தட

Jun27

உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேஸ