More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • பூராணை தினம் பௌத்தர்களின் அதி உன்னத சமய பண்டிகையாகும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்
பூராணை தினம் பௌத்தர்களின் அதி உன்னத சமய பண்டிகையாகும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்
May 26
பூராணை தினம் பௌத்தர்களின் அதி உன்னத சமய பண்டிகையாகும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்

புத்த பெருமானின் பிறப்பு, ஞானம்பெறுதல், பரிநிர்வாணமடைதல் ஆகிய மூன்று உன்னதமான நிகழ்வுகளை நினைவுகூரும் விசாக பூராணை தினம் பௌத்தர்களின் அதி உன்னத சமய பண்டிகையாகும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.



விசாக பூராணை தினத்தை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.



உலகெங்கிலும் வாழும் பௌத்த மக்கள் இந்த புனித நாளில், புத்த பெருமான் மீதான பக்தியுடனும் பற்றுறுதியுடனும் புண்ணிய கிரியைகளில் ஈடுபடுகின்றனர்.



புத்த பெருமானின் போதனைகளுக்கு ஏற்ப வாழ்க்கையை வடிவமைத்து ஈருலக முன்னேற்றத்திற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதும் பிள்ளைகளுடன் சேர்ந்து வெசக் காலத்தில் சமயச் சடங்குகளை செய்வதும் பழங்காலத்திலிருந்தே பின்பற்றப்பட்டு வரும் பௌத்த பாரம்பரியமாகும்.



கடந்த வருடத்தைப் போலவே, இந்த வருடமும், உலகளாவிய கொவிட் தொற்றுநோய் காரணமாக, சுகாதாரத் துறையின் பரிந்துரைகளின் பேரில் கூட்டு சமயக் கிரியைகளில் ஈடுபடுவதற்கான வாய்ப்பை தற்காலிகமாக இடைநிறுத்த வேண்டி ஏற்பட்டுள்ளது.



எனினும் மூன்று உன்னத விழாக்களை நினைவுகூர்ந்து தத்தமது வீடுகளில் தங்கியிருந்து சமயக் கிரியைகளில் ஈடுபடுவதற்கு அதனை தடையாக கொள்ளத் தேவையில்லை.



அனைத்து உயிரினங்கள் மீதும் கருணையை பரப்பும் புத்த பெருமானின் போதனைகளின் படி, அடுத்த மனிதர்களின் உயிர்களின் பாதுகாப்பிற்கும் நல்வாழ்விற்கும் அர்ப்பணிப்புடன் செயற்படுவது இந்த தொற்றுநோய் நிலைமைகளுக்கு மத்தியில் எமது சமூக கடமை என்பதுடன், பௌத்தர்களின் இந்த உயர்ந்த பண்பினை உலகிற்கு முன்னுதாரணமாக எடுத்துக்காட்டுவதற்கும் இது சிறந்த சந்தர்ப்பமாகும் என ஜனாதிபதி தனது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Aug12

அதிபர்கள், ஆசிரியர்களின் சம்பள முரண்பாடுகள் தீர்க்கப

May09

 இலங்கை முழுவதும் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்

Mar14

2021ம் ஆண்டுக்கான ஐந்தாம் ஆண்டு புலமைப்பரீசில் பரீட்சை

Mar09

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள டொலர் தட்டுப்பாட்டுக்க

Jan29

கோவிட் தொற்றுக்குள்ளானதாக சந்தேகிக்கப்படும் பெண்ணொர

Mar30

யால வன சரணாலயத்தில் அரியவகை கருஞ்சிறுத்தை ஒன்றை சுற்ற

May03

பௌத்தத்தைப் பாதுகாப்பதற்கும், பேணி வளர்ப்பதற்கும், பு

Feb09

கிராமப்புற மக்களின் வாழ்க்கை தரத்தினை உயர்த்த வேண்டி

Feb01

அரசாங்கத்தினால் அமைக்கப்பட்டுள்ள புதிய ஆணைக்குழுவை

Jul06

சட்ட விரோதமான முறையில் இந்தியாவில் இருந்து கடல் மார்க

Aug01

ராஜகிரிய மேம்பாலத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்தொன

Oct16

மட்டகளப்பில் நேற்று மக்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தை அட

Mar30

இந்திய தேசம் இலங்கை விவகாரத்தில் காத்திருந்து உரிய நே

Jan27

பிணை முறிக்கடனைத் திருப்பிச் செலுத்துவதை தாமதிப்பதற

Oct04

பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தினால் இலங்கை மக்களி